பாலைவனப் பூ
₹400.00
பாலைவனப் பூ
வாரிஸ் டைரி , காத்லின் மில்லர்
நான் பேசியிருப்பது, என்னிடமுள்ள மிகமுக்கியமான ரகசியம். எனது நெருங்கிய நண்பர்களுக்குக்கூடத் தெரியாது, எனது சிறுவயதில் எனக்கு என்ன நடந்தது என்று. அது சோமாலியாவில் நெடுங்காலமாகக் கடைபிடிக்கப்பட்டுவரும் ஒரு தனிப்பட்டக் கலாச்சாரம். அதை நான், என்னால் முடிந்த அளவுக்கு எப்போதும் பேசுவதுபோல, மிக எளிதாக வெளிப்படுத்திவிட்டேன். பல லட்சம் முகமறியாதவர்களின் அந்தரங்கத்தை நான் இப்போது பேசியிருக்கிறேன்….
பெண் விருத்த சேதனம் அல்லது பெண் பிறப்புறுப்பு சிதைப்புபோல பலவிஷயங்கள், ஆப்பிரிக்கா விலுள்ள இருபத்தெட்டு நாடுகளில் பெருவாரியாக நடந்துவருகின்றன. சிறுமிகளும் பெண்களுமாக இதுவரை 13 கோடி பேரிடம் இக்கொடும்நடவடிக்கை கைக்கொள்ளப்பட் டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள்தொகை நடவடிக்கைக்கானப் பிரிவு மதிப்பீடு செய்திருந்தது.
தமிழில் : எஸ் அர்ஷியா
Palavana Poo / Palaivanappu
You may also like…
-
மயில் புராணம்
₹270.00 Add to cart Buy nowமயில் புராணம்
மயில் புராணம்
பாகிஸ்தானிய சிறுகதைகள்
இந்த்ஜார் ஹுசைன்
இந்த்ஜார் ஹுசைன் பாகிஸ்தான் எழுத்தாளர். இவர் தன்னை ‘கனவுகளின் வியாபாரி’ என்று கூறிக்கொள்கிறார். இவருடைய சிறுகதைகளைப் படித்தவுடன் இவர் ‘கனவுகளின் வியாபாரி’ அல்ல, சமுதாயத்திற்கு தேவையான ‘தன்வந்தரி’ என்ற எண்ணம் நமக்குள் தோன்றுகிறது.தீவிரமான விஷயங்களை நுணுக்கமாகச் சொல்கிறார். குரான், பைபிள், இராமாயணம் மகாபாரதம், புத்த, சமண நூல்களை நன்கு கற்றரிந்தவர். அவர் கதைகளில் அதைக் காணலாம். இதுபோன்ற படைப்புகளே உலகத்தைச் சுருக்கி நம் கனவுகளையும் அனுபவங்களையும் விரிவடையச் செய்பவை.தமிழில் : கே. நல்லதம்பிரூ: 270₹270.00 -
அடையாள மீட்பு
₹180.00 Add to cart Buy nowஅடையாள மீட்பு
அடையாள மீட்பு
காலனிய ஓர்மை அகற்றல்ஆப்பிரிக்க இலக்கிய மொழி அரசியல்கூகி வா தியாங்கோ
தேசிய, சனநாயக, மனித குல விடுதலை இதன் மையம். எமது மொழியை மீள் கண்டுபிடிப்பு செய்து மீட்டுருவாக்கம் செய்வதற்கான அறை கூவல், ஆப்பிரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான புரட்சிகர சொல்லாடல்களுடான, புதுப்பிக்கப்பட்ட மீள் தொடர்புக்கான அறைகூவல் ஆகும். மனித இனத்தின் உண்மை மொழியை மீள் கண்டுபிடிப்பு செய்வதற்கான கூக்குரல் அது; போராட்ட மொழியை முன்னெடுப்பதற்கான குரல் அது. அதுதான் நமது வரலாற்றுக்கு அடிப்படையான பொதுமை மொழி. போராட்டமே வரலாற்றைப் படைக்கிறது. போராட்டமே நம்மை உருவாக்குகிறது. போராட்டத்தில் தான் நமது வரலாறு, மொழி, இருப்பு தங்கியுள்ளது. அது நாம் எங்கிருந்தாலும் தொடங்கும்; எது செய்தாலும் இருக்கும். அப்போது நாம் மாட்டின் கார்ட்டர் கண்ட கோடிக்கணக்கான மக்களுடன் சேர்வோம்: நாம் கனவுகாண உறங்குபவர் அல்ல; உலகை மாற்றக் கனவு காண்பவர்கள்.தமிழில் : அ. மங்கைரூ : 180₹180.00 -
13 வருடங்கள் – ஒரு நக்ஸலைட்டின் சிறைக் குறிப்புகள்
₹220.00 Add to cart Buy now13 வருடங்கள் – ஒரு நக்ஸலைட்டின் சிறைக் குறிப்புகள்
13 வருடங்கள் – ஒரு நக்ஸலைட்டின் சிறைக் குறிப்புகள்
ராம்சந்த்ரா சிங்
தமிழில் : இரா செந்தில்
தன்னுடைய ‘குற்றவாளி’ வாழ்வின் கீழ்மைப்பட்ட வாசத்தைக் கொண்டு சிங் நம்முடைய ஆன்மாக்களை எழுப்புகிறார். உண்மையில் அவருடைய நினைவுக்குறிப்புகள் நெருப்பின் வாசத்தை கொண்டிருக்கின்றன. – வரவர ராவ்
இது மனதிலிருந்து சொல்லப்பட்ட புரட்சி, வாழ்க்கை மற்றும் காதல் பற்றிய நினைவுக்குறிப்பு. இதனுடைய எளிமையும் உண்மைத்தன்மையும் உணர்ச்சிகளை உருக்கக்கூடியது. – கே.ஆர்.மீரா
இந்தியா இப்போது கட்டாய உழைப்பு முகாம்களாக ஆகிவிட்ட மையத்தை இந்தக் கடத்தி வரப்பட்ட விவரங்கள் வெளிக்கொண்டு வருகின்றன. அவசியம் படிக்கவேண்டிய ஒன்று. – ஆனந்த் டெல்டும்டே
Naxal / Naxalismரூ: 220₹220.00 -
ஆடு ஜீவிதம்
₹270.00 Add to cart Buy nowஆடு ஜீவிதம்
.ஆடு ஜீவிதம்
பென்யாமின்
நஜீபின் ஆசையெல்லாம் கல்ஃபில் வேலைப்பார்த்து வீட்டிற்குத் தேவையான பணம் அனுப்புவதுதான். இரக்கமற்ற, அபத்தமானத் தொடர் நிகழ்வுகளால் உந்தப்படும் நஜீபிற்கு சவுதி பாலைவனத்தின் நடுவில் ஆடுகளை மேய்க்கும் அடிமை வாழ்வு வாழ நேரிடுகிறது. தனது கிராமத்தின் செழிப்பான பசுமையான நிலப்பரப்பின் நினைவுகளும் தன் அன்பான குடும்பத்தின் நினைவுகளும் ஆடுகளின் துணையில் மட்டுமே ஆறுதல் கொண்டிருக்கும் நஜீபைத் துன்புறுத்துகிறது. முடிவில், பாலைவனச் சிறையிலிருந்து தப்பிக்க இந்த இளைஞன் ஓர் ஆபத்தான திட்டத்தைத் தீட்டுகிறார்.
மலையாளத்தில் வெளியிடப்பட்டு வரவேற்பைப் பெற்ற ஆடு ஜீவிதம் சிறந்த விற்பனைப் பட்டியலில் இடம்பெற்ற நாவல். மலையாள இலக்கியத்தின் அற்புதமான புதிய எழுத்தாளர்களில் ஒருவரான பென்யாமின், நஜீபின் விசித்திரமானதும் அவலச்சுவை கொண்டதுமான பாலைவன வாழ்க்கையை நையாண்டியாகாவும் மென்மையாகவும் கூறி, தனிமை மற்றும் புறக்கணிப்பின் உலகளாவிய கதையாக இதை உருமாற்றுகிறார்.
2009 இன் கேரள சாகித்திய அகாதெமி விருதினை வென்ற நாவல்
Benyamin
தமிழில் : விலாசினி
ரூ270
₹270.00 -
இந்தியா ஏமாற்றப்படுகிறது
₹320.00 Add to cart Buy nowஇந்தியா ஏமாற்றப்படுகிறது
.
தொகுப்பு
பிரதீக் சின்ஹா / டாக்ட ர் சுமையா ஷேக் / அர்ஜூன் சித்தார்த்அச்சு ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் திட்டமிட்டுப் பரப்பப்படுகிற பொய்செய்திகளாலும் கட்டுக்கதைகளாலும் இந்தியாவின் சமூகச்சூழலே ஆட்டங்கண்டிருக்கிறது. கும்பல்படுகொலைகள், கும்பல் வன்முறைகள், அவதூறுகள், கலவரங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கும் அவை இட்டுச்சென்றிருக்கின்றன. இந்தியாவின் ஜனநாயகத்தன்மைக்கும் அச்சுறுத்தலாகவே அவை தொடர்ந்து இருக்கின்றன.
“இந்தியா ஏமாற்றப்படுகிறது” என்னும் இந்நூல், ஆல்ட் நியூஸ் என்கிற இணையதளக் குழுவினால் எழுதப்பட்டு, பிரதீக் சின்ஹா, மருத்துவர் சுமையா ஷேக் மற்றும் அர்ஜுன் சித்தார்த் ஆகியோரால் தொகுக்கப்பட்டிருக்கிறது. வதந்திகளைப் பரப்புவோரை அடையாளங்காட்டி, அவற்றை மிகத்தெளிவாகத் திட்டமிட்டே உருவாக்கும் பிரச்சார எந்திரங்களை அம்பலப்படுத்தி, அச்சுறுத்தும் வகையிலான கட்டுக்கதைகளைக் கண்டறிவதற்கான உத்திகளை வாசகர்களுக்கு விளக்கிச்சொல்லும் பணியினையும் இந்நூல் சிறப்பாக செய்கிறது.
தமிழில் : இ பா சிந்தன்ரூ320₹320.00 -
ஒற்றை வைக்கோல் புரட்சி
₹160.00 Add to cart Buy nowஒற்றை வைக்கோல் புரட்சி
ஒற்றை வைக்கோல் புரட்சி
மசானபு ஃபுகோகா
புதிதாய் வருபவர்கள் ‘இயற்கை வேளாண்மை’ என்பதற்கு, இயற்கையானது வேளாண்மையைக் கவனித்துக்கொள்ளும், நாம் சற்றுத் தள்ளி உட்கார்ந்து வேடிக்கை பார்க்கலாம் என்று பொருள்கொண்டால், ஃபுகோகா அவர்கள் அறிந்துகொள்ள வேண்டியதும் பெருமளவில் உள்ளது என்பதைக் கற்றுக் கொடுப்பார். சரியாகக் கூற வேண்டுமானால், வேட்டையாடிச் சேகரித்த காலம் ஒன்றுதான் இயற்கை வேளாண்மைக் காலம்.பயிர்களை வளர்க்கத் துவங்கியது கலாச்சாரக் கண்டுபிடிப்பாகும். அதனால் அதற்கு அறிவும் தொடர்ச்சியான முயற்சியும் தேவைப்படுகிறது. ஃபுகோகாவின் முறையில் உள்ள முக்கியமான வேறுபாடு என்னவென்றால், அது இயற்கையோடு ஒத்துழைப்பதில் இருக்கிறது. இயற்கையை ஆக்கிரமித்து அதை மேம்படுத்துவதில் அல்ல.தமிழில் : பூவுலகின் நணபர்கள்Otrai Vaikol Puratchi / Ottrai Vaikkol Puratchiரூ160
₹160.00
Umadevi P –
இந்த புத்தகம் படிக்க தகவலறிந்ததாகவும், மனதைத் தொடுவதாகவும் இருந்தது, இதைப் பார்க்க யாரையும் பரிந்துரைக்கிறேன், அது நமது கிரகத்தின் மற்றொரு உலகத்திற்கு உங்கள் கண்களைத் திறக்கும்.
Ganesh Durairaj –
“பாலைவனப் பூ” என்பது வாரிஸ் டைரியின் (சோமாலிய) வாழ்க்கை பற்றி 1998 இல் வெளியிடப்பட்ட வாரிஸ் டைரி , கேத்லீன் மில்லர் எழுதிய சுயசரிதை புத்தகம். . உண்மையிலேயே ஒரு பரபரப்பான புத்தகம்…
Raveendran Kolappan –
பாலைவனப் பூ: பாலைவன நாடோடி பெண்ணின், வாரிஸ் டைரி , அசாதாரண பயணம்.
Anbarasan K –
அற்புதமான புத்தகம், ஒருமுறை படிக்க ஆரம்பித்தவும், அதை முடிக்கும் வரை என்னால் நிறுத்த முடியவில்லை…
Ravi Arulprasad –
Waris is an inspiration to all. She overcame so much to grasp a chance at true freedom. She is now a determined spokesperson against female genital mutilation. Very good book.