இந்துவாக நான் இருக்கமுடியாது

(3 customer reviews)

299.00

 .
பன்வர் மெக்வன்ஷி
 

‘ஆர்எஸ்எஸ் – ஸில் கடமை உணர்ச்சியுடன் பல ஆண்டுகள் பணியாற்றிய பிறகு ஒரு தலித்தின் மயக்கம்நீங்கிய, கொடுமைநிறைந்த, வலிமிகுந்த, நேர்மையான நினைவலைகள்’ – சசி தரூர்

‘இது போன்ற ஒரு வரலாற்று நினைவுக்குறிப்புகள் அற்புதம் என்பதைவிடக் குறைவானதல்ல’ – பெருமாள் முருகன்

‘இந்தியாவின் ஆன்மாவில் சர்வாதிகார, பாசிச போக்குகள் படிந்திருக்கும் இந்த நாட்களில் ‘இந்துவாக நான் இருக்கமுடியாது’ நூலைப் படிக்கவேண்டியது அவசியமாகும். இது உங்கள் கண்களைத் திறக்கும். உங்கள் சிந்தனைகளை விடுவிக்கும். மேலும் உண்மையான சுதந்திரம் எது என உங்களை உணரவைக்கும்’ – பென்யாமின்

‘நான் ஒரு லாரி ஓட்டுநர். இந்தப்புத்தகம் நான் செல்லும் எல்லா இடங்களுக்கும் என்னோடு பயணம் செய்கிறது. இதைப்பற்றி மற்றவர்களிடம் நான் கூறுகிறேன்’ – பாலுலால் கண்டேலா

‘ஆர்எஸ்எஸ்ஸின் வஞ்சக வலையிலிருந்து எப்படித் தப்பிப்பது என்பதற்கான ஒரு கையேடு. ஒவ்வொரு சமூகச்செயல்பாட்டாளரும் இதைக் கட்டாயம் படிக்கவேண்டும்’ – டாக்டர் தாராராம் கௌதம்

‘சங் பரிவாரத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் இதை நான் பரிந்துரைக்கிறேன்’ – அவினாஷ் விகாஸ் சர்மா
HINDUVAKA NAN IRUKKA MUDIYATHU
தமிழில் : செ நடேசன்
Banvar Mehvanshi
பக்கங்கள் 304  ரூ299

✅ 100% TAX FREE ✅ 100% REFUND POLICY ✅ 24x7 CUSTOMER CARE ✅ ASSURED HOUSE DOORSTEP DELIVERY ANYWHERE IN INDIA ✅ PERFECT FOR URBAN AND NON-URBAN BUYERS ALIKE ✅ INSTANT WHATSAPP HELPDESK AND DELIVERY STATUS UPDATE ON ENQUIRY: 91-9446808800 ✅ 8 + YEARS OF CUSTOMER SATISFACTION

Description

Tamil Translation of “I Could Not Be Hindu – The Story of a Dalit in the RSS”  by Bhanwar Meghwanshi

3 reviews for இந்துவாக நான் இருக்கமுடியாது

  1. Senthil Rajasekaran M

    இந்த புத்தகம் பல வழிகளில் தனித்துவமானது. முதலாவதாக, இது முன்னாள் ஆர்எஸ்எஸ் உறுப்பினரால் எழுதப்பட்டது, அவர் அமைப்பின் தீவிர விமர்சகராக ஏன் மாறினார் என்பதை விரிவாக விளக்குகிறார். இன்றுவரை, சில முன்னாள் சுயம்சேவகர்கள் சங்கத்தில் தங்கள் அனுபவம் என்ன என்பதை விவரித்து, அவர்கள் அதை விட்டு சென்றதற்கான காரணங்களை முன்வைத்தனர்.

  2. Tamil Meinathan

    மகாராஷ்டிர பிராமணர்களால் உருவாக்கப்பட்ட, ஆர்எஸ்எஸ் படிப்படியாக “மினியேச்சர் இந்து ராஷ்ட்ரா” ஆக அனைத்து வகையான சாதி பின்னணியிலிருந்தும் இந்துக்களை ஈர்க்க முயன்றது.

  3. Mullai Selvan

    நான் ஆதித்தமிழன்.

Add a review

Your email address will not be published. Required fields are marked *

You may also like…

  • தீர்ப்பு - இந்தியத் தேர்தல்களைப் புரிந்து கொள்ளல்

    தீர்ப்பு – இந்தியத் தேர்தல்களைப் புரிந்து கொள்ளல்

    399.00
    Add to cart Buy now

    தீர்ப்பு – இந்தியத் தேர்தல்களைப் புரிந்து கொள்ளல்

    தீர்ப்பு – இந்தியத் தேர்தல்களைப் புரிந்து கொள்ளல்
    பிரணாயி ராய்

    ஒவ்வொரு இந்தியனின் மரபணுவின் அடித்தளத்திலேயே மக்களாட்சி உணர்வு இருக்கிறது. நமது நனவு நிலைக்கு உரித்தானது அது. நமது உரையாடல்களுக்கு அது உயிரூட்டுகிறது, நமது மனங்களை ஊக்குவிக்கிறது; நம்மிடமுள்ள சிறந்தவற்றை வெளிக்கொண்டு வருகிறது. சில வேளைகளில் மோசமானவற்றையும் கூட. எவ்வளவுக்கு எவ்வளவு நாம் ஒன்றுமில்லாமல் ஆக்கப்பட்டிருக்கிறோமோ, எவ்வளவுக்கு எவ்வளவு நாம் ஏழைகளாக இருக்கிறோமோ, எவ்வளவுக்கு எவ்வளவு நாம் அந்நியப்படுத்தப்படுகிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு நாம் பங்கு கொள்கிறோம்; நமது நாட்டின் தேர்தல்களையும் மக்களாட்சியையும் பாதுகாக்கிறோம். மக்களாட்சி மேல் தாக்குதல் நடத்தப்படும் ஒவ்வொரு முறையும், இந்திய வாக்காளர் தேர்தல் நேரத்தில் திரும்பத் தாக்குகிறார். இந்தியத் தேர்தல்களின் வரலாறு விடுதலையின் வெற்றிக் கதை. மக்களாட்சிக் கருத்தியல் என்பது நமது வாக்காளர்களின் மரபணுவில் இருக்கும் அதே வேளையில், நமது மக்களாட்சியின் உட்கூறாக நமது வாக்காளர்தான் இருக்கிறார், அரசியல்வாதியல்ல.

    தமிழில் : ச வின்சென்ட்

    Theerppu – Indiya Therthalkalai Purinthu Kollal / Theerpu India therthalai

     ரூ399

    399.00
  • அடையாள மீட்பு

    அடையாள மீட்பு

    180.00
    Add to cart Buy now

    அடையாள மீட்பு

    அடையாள மீட்பு
    காலனிய ஓர்மை அகற்றல்
    ஆப்பிரிக்க இலக்கிய மொழி அரசியல்

    கூகி வா தியாங்கோ

    தேசிய, சனநாயக, மனித குல விடுதலை இதன் மையம். எமது மொழியை மீள் கண்டுபிடிப்பு செய்து மீட்டுருவாக்கம் செய்வதற்கான அறை கூவல், ஆப்பிரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான புரட்சிகர சொல்லாடல்களுடான, புதுப்பிக்கப்பட்ட மீள் தொடர்புக்கான அறைகூவல் ஆகும். மனித இனத்தின் உண்மை மொழியை மீள் கண்டுபிடிப்பு செய்வதற்கான கூக்குரல் அது; போராட்ட மொழியை முன்னெடுப்பதற்கான குரல் அது. அதுதான் நமது வரலாற்றுக்கு அடிப்படையான பொதுமை மொழி. போராட்டமே வரலாற்றைப் படைக்கிறது. போராட்டமே நம்மை உருவாக்குகிறது. போராட்டத்தில் தான் நமது வரலாறு, மொழி, இருப்பு தங்கியுள்ளது. அது நாம் எங்கிருந்தாலும் தொடங்கும்; எது செய்தாலும் இருக்கும். அப்போது நாம் மாட்டின் கார்ட்டர் கண்ட கோடிக்கணக்கான மக்களுடன் சேர்வோம்: நாம் கனவுகாண உறங்குபவர் அல்ல; உலகை மாற்றக் கனவு காண்பவர்கள்.

    தமிழில் : அ. மங்கை

    ரூ : 180
    180.00
  • எங்கே செல்கிறது இந்தியா?

    எங்கே செல்கிறது இந்தியா?

    350.00
    Add to cart Buy now

    எங்கே செல்கிறது இந்தியா?

    எங்கே செல்கிறது இந்தியா?
    கைவிடப்பட்ட கழிப்பிடங்கள்/ தடைபட்ட வளர்ச்சிகள்/ சாதியத்தின் விலைகள்

     டியானே காஃபே ,  டீன் ஸ்பியர்ஸ்

    இந்த உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் கடந்த நூற்றாண்டுகளைவிட ஆரோக்கியமாக வாழ்கிறார்கள். ஏனென்றால் அதன் ஒருபகுதியாக வளரும் குழந்தைகளிடமிருந்து மலக்கழிவுக்கிருமிகளை கழிப்பிடங்களும், கழிப்பறைகளும் அப்பால் வைக்கின்றன. இந்தியா மட்டும் இதில் விதிவிலக்காக உள்ளது. பெரும்பாலான இந்தியர்கள் கழிப்பறைகளையோ அல்லது கழிப்பிடங்களையோ பயன்படுத்துவதில்லை. அதனால், அருகில் உள்ள ஏழை நாடுகளைவிட இந்தியாவில் குழந்தைகள் மிகவும் அதிகமாக இறந்துவிடுகின்றன. இந்தியாவிலுள்ள குழந்தைகள் சஹாரா –ஆஃப்ரிக்க துணைக்கண்டத்திலுள்ள குழந்தைகளைவிட வளர்ச்சி தடைபட்டவர்களாக உள்ளார்கள். இந்தியாவின் திறந்தவெளி மலம் கழிப்பு வறுமையினால் அல்ல: சாதிய அமைப்புமுறை, தீண்டாமை, சடங்குபூர்வ புனிதம், தீட்டு ஆகியவற்றின் நேரடி விளைவுகளாலேயே என்பதை ‘எங்கே செல்கிறது இந்தியா?’ மெய்ப்பித்துக் காட்டுகிறது.

     தமிழில் : செ  நடேசன்

    Where India Goes: Abandoned Toilets, Stunted Development and the Costs of Caste
    Enke Selkirathu India Enke Selgirathu Indiya
    ரூ350

    350.00
  • ஜாதியற்றவளின் குரல்

    ஜாதியற்றவளின் குரல்

    450.00
    Add to cart Buy now

    ஜாதியற்றவளின் குரல்

    ஜாதியற்றவளின் குரல்
    ஜெயராணி

    குடிமை உரிமை / மனித உரிமை அமைப்புகள் எனத் தமிழ்நாட்டில் செயல்படும் எந்த அமைப்புடனும் ஜெயராணி தன்னை இணைத்துக்கொள்ளவில்லை என்றாலும் அவற்றின் கருத்துநிலை, நடைமுறைத் தளங்களைவிட விரிவானதும் வீச்எல்லைகள் கொண்டவையுமான பிரச்சனைகள் புலனாய்வு இதழியாளராக, மனித உரிமை ஆர்வலராக, தலித்திய எழுத்தாளராக, பெண்ணிலைவாதியாகத் தன்னை நிறுவிக் கொள்கிறார் தனது எழுத்துக்கள் மூலம். அம்பேத்கரின் உலகளாவிய மனிதநேயப் பார்வையும் பெரியாரின் சாதி ஒழிப்பு, ஆணாதிக்க எதிர்ப்பு மூடநம்பிக்கை எதிர்ப்புப் பகுத்தறிவுப் பார்வையும் – ஜெயராணி விடயங்களை பார்க்கும் புரிந்துகொள்ளும் கோணத்தை வடிவமைக்கின்றன.
    – எஸ். வி. ராஜதுரை

    ரூ : 450
    450.00
  • பெண்களை உயர்த்துவோம் சமுதாயத்தை உயர்த்துவோம்

    பெண்களை உயர்த்துவோம் சமுதாயத்தை உயர்த்துவோம்

    399.00
    Add to cart Buy now

    பெண்களை உயர்த்துவோம் சமுதாயத்தை உயர்த்துவோம்

    பெண்களை உயர்த்துவோம் சமுதாயத்தை உயர்த்துவோம்
    மெலின்டா கேட்ஸ்

    தன்னுடைய இருபதாண்டுகால சமூகப் பணியின் ஊடாக மெலின்டா கேட்ஸ் கற்றுக் கொண்டுள்ள மிக முக்கியமான விஷயம் இதுதான்: நீங்கள் ஒரு சமுதாயத்தை உயர்த்த விரும்பினால், பெண்களை அடக்கி ஒடுக்குவதை நீங்கள் உடனடியாக நிறுத்தியாக வேண்டும்.
    குழந்தைத் திருமணத்தில் தொடங்கி, பெண்களுக்குக் கருத்தடைப் பொருட்கள் எளிதில் கிட்டாமல் இருப்பது மற்றும் பணியிடத்தில் நிலவும் பாலினச் சமத்துவமின்மைவரை, நாம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய பிரச்சனைகளைப் பற்றி நம்மால் மறக்க முடியாத விதத்தில் மெலின்டா கொடுத்துள்ள விவரிப்புக்கு, அதிர்ச்சியூட்டும் உண்மைத் தகவல்கள் பக்கபலமாக விளங்குகின்றன.
    இந்நூலை உணர்ச்சிகரமாகவும் வெளிப்படையாகவும் நேர்த்தியாகவும் எழுதியுள்ள மெலின்டா, அசாதாரணமான பெண்களை நமக்கு அறிமுகம் செய்து வைப்பதோடு, ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ளுவதால் உருவாகின்ற சக்தியையும் நமக்குப் படம்பிடித்துக் காட்டுகிறார்.
    நாம் மற்றவர்களை உயர்த்தும்போது, அவர்கள் நம்மை உயர்த்துகின்றனர்.

     

    உலகின் மிகப் பெரிய தொண்டு நிறுவனமாகத் திகழுகின்ற ‘பில் & மெலின்டா கேட்ஸ் அறக்கட்டளை’யைத் தன் கணவர் பில் கேட்ஸுடன் இணைந்து தோற்றுவித்து, ஒரு கொடையாளியாகவும் தொழிலதிபராகவும் திகழுகின்ற மெலின்டா கேட்ஸ், சர்வதேச அளவில் பெண்களுக்காகவும் சிறுமியருக்காகவும் வலிமையாகக் குரல் கொடுக்கின்ற ஒரு மிகப் பெரிய ஆளுமையாகவும் விளங்குகிறார். டெக்சாஸ் மாநிலத்திலுள்ள டல்லாஸ் நகரில் பிறந்து வளர்ந்த மெலின்டா, கணினி அறிவியலில் இளங்கலைப் பட்டமும், பிறகு எம்பிஏ பட்டமும் பெற்றார். அவர் தன்னுடைய தொழில்வாழ்க்கையின் முதல் பத்தாண்டுகளை மைக்ரோசாஃப்டில் செலவிட்டார். அதன் பிறகு, அவர் அந்நிறுவனத்தைவிட்டு வெளியேறி, தன்னுடைய குடும்பத்தின்மீதும் அறப்பணிகள்மீதும் முழு கவனம் செலுத்தலானார். வாஷிங்டன் மாநிலத்திலுள்ள சியாட்டில் நகரில் அவர் தன் கணவர் பில் கேட்ஸுடன் வாழ்ந்து வருகிறார். அவர்களுக்கு ஜென், ரோரி, ஃபீபி ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர்.

    Penkalai Uyarthuvom Samuthayathai Uyarthuvom 

    பக்கங்கள் 342  விலை ரூ399

    399.00