Tamil - Study

Showing 1–24 of 38 results

Show Grid/List of >5/50/All>>
  • Periyr Collectiion on Religion

    பெரியார் களஞ்சியம் – மதம் [பாகம் 1-6]

    395.00
    Add to cart Buy now

    பெரியார் களஞ்சியம் – மதம் [பாகம் 1-6]

    பெரியார் களஞ்சியம் – மதம் [பாகம்1-6]
    தந்தை பெரியார்

     

    இந்நூல்  –  மத விபரீதம், குருக்களின் புரட்டு, இந்து மத பிரசாரம்,  சன்மாக்கமும் துன்மார்க்கமும், இந்து மதங்களும்  யாகங்களும், சமயம், சைவ சமயம், வருணாசிரம மாநாடு, இந்தியாவில் பார்ப்பனீயம், எது ஜீவகாருண்யம், மதமும் சீர்திருத்தமும் மூடப்பண்டிகைகள், சோதிடம், இஸ்லாமியமும் இந்து மதமும், சமரச சன்மார்க்கமும், ஆத்மா  பற்றிய ஓர் ஆராய்ச்சி போன்ற  44 உட்தலைப்புகளில் மதம் பற்றிய பெரியாரின்  பேச்சுக்களும் கட்டுரைகளும் கொண்டது.

    இந்நூல் – கடவுள்  கதை, கடவுளும் மனிதனும்  கடவுள் மறுப்பும்  கோவில்  இருப்பும், கடவுள் இழிவு, மூடநம்பிக்கை, கடவுள் உண்டான  காலம், கடவுள்  அவதாரங்கள், கடவுள்  பக்தி, இழிவை ஒழிக்க  வழி, வளர்ச்சிக்கு வழி, பூசையால் விளையும்  நாசம், அறிவுக்கு பொருந்தாத கடவுள், கோயில் ஒரு சுரண்டல் கருவி, கபட  நாடகக்  கடவுள், கடவுளின்  திருவிளையாடல்கள், கடவுள் தர்பார், பகவான்  சோதிக்கிறார், கோயில்கள்  ஏற்பட்டது எப்படி?  தத்துவ விளக்கம் போன்ற  79 உட்தலைப்புகளில் காலவரிசைப்படி கடவுள்  பற்றிய  பெரியாரின்  பேச்சுக்களும்  கட்டுரைகளும் கொண்டது.

    இந்நூல் –  இரு கிருஷ்ணர்கள், தருமம் என்பது என்ன?, செங்கல்பட்டு சுயமரியாதை மகாநாட்டுத் தீர்மானங்கள், கேரளா சீர்திருத்த  மகாநாடு, மதமும் சாதியும்,  கோவில் கோபுரங்களின்  ஆபாசங்கள், புத்தமதமும்  சுயமரியாதையும், இந்து – முஸ்லிம், அய்யர் – அய்யங்கார் சம்பாஷணை, மத ஸ்தாபனங்கள், அக்ரகாரத்தில் மகாத்மா, மதக்கிறுக்கு, இஸ்லாம்  மத ஒழுக்கம், இந்து முஸ்லீம்  ஒற்றுமை, பார்ப்பனிய  பிளேக்கை அழிக்க வேண்டும், போன்ற 52  உட்தலைப்புகளில் காலவரிசைப்படி  மதம் பற்றிய பெரியாரின்  கட்டுரைகளும் பேச்சுகளும் அடங்கியது.

    இந்நூல் – ஆரிய மதவண்டவாளம், மேல்நாடும் கீழ்நாடும், எது உண்மை மதம்,  வர்ணாஸ்சிரமச் சாக்கடை, சைவ வைணவப் போட்டி , எது கடவுள்?, எது மதம்?, பார்வதி  பரமசிவன் சாம்பாஷணை, நாயன்மார் முக்தி பெற்ற  விதம்,  ராமனும் சீதையும் யோக்கியர்களா?, பழந்துனி கேட்கும் பரமன்,  சிலப்பதிகாரம் மூட நம்பிக்கைக் களஞ்சியம், சமுதாயத் துறையில் நமது நிலை, சிவராத்திரி பண்டிகையின்  வண்டவாளம், வேதம் என்பது  வெறும்  வசைப்பாட்டுகளே  போன்ற 58  உட்தலைப்புகளில்  காலவரிசைப்படி மதம் பற்றிய பெரியாரின் பேச்சுகளும் கட்டுரைகளும் அடங்கியது.

     

    395.00
  • Periyar Book - About God

    பெரியார் களஞ்சியம் – கடவுள் [பாகம் 1-3]

    780.00
    Add to cart Buy now

    பெரியார் களஞ்சியம் – கடவுள் [பாகம் 1-3]

    பெரியார் களஞ்சியம் – கடவுள் [பாகம் 1-3]
    பெரியார்

     

    இந்நூல்  – கடவுள், சாமியும் சமயமும், காந்தியும் கடவுளும், பிள்ளையார், பிரார்த்தனை, ஆரியர் கடவுள், எது நாஸ்திகம், பிள்ளையார் உடைப்பு  கடவுள்  யோக்கியதை, கடவுள் குழப்பம், கடவுள் என்பது ஒரு பொருளா? இந்து மதத்திற்கு  கடவுள் உண்டா?  கடவுளின் நாச  வேலைகள்  போன்ற  64 உட்தலைப்புகளில்  காலவரிசைப்படி கடவுள் பற்றிய  பெரியாரின் பேச்சுக்களும் கட்டுரைகளும் கொண்டது.

    780.00
  • பெரியார் களஞ்சியம்-பகுத்தறிவு

    பெரியார் களஞ்சியம் – பகுத்தறிவு [1]

    350.00
    Add to cart Buy now

    பெரியார் களஞ்சியம் – பகுத்தறிவு [1]

    பெரியார் களஞ்சியம்-பகுத்தறிவு – 1
    தந்தை பெரியார்

    இந்நூல் சமதர்மமும் நாஸ்திகமும், பகுத்தறிவும் நாஸ்திகமும், பகுத்தறிவை அடிமைப்படுத்தும் மதம், பகுத்தறிவு சங்கம், (சிந்தனை, பகுத்தறிவு, ஆராய்ச்சி), விபூதியின் பெருமை (சைவாகமத்தில் உள்ளது), பகுத்தறிவைச் செலவு செய்யக் கூடாதா? யோசித்து பாவம் என்ற கட்டுப்பாட்டால்தான் நாம் கீழ் நிலையுற்றோம், சிலப்பதிகாரம் மூடநம்பிக்கைக் களஞ்சியம், பகுத்தறிவை வளர்க்க படிப்பகங்கள் தேவை, மாணவர்களும் பகுத்தறிவும் (பகுத்தறிவும், புரட்சியும்), பகுத்தறிவுக்குப் பொருத்தமில்லாத கருத்துக்கள் கொண்டதே இராமாயணம், புரட்சிக்கரமான கலைகள் மிளிர வேண்டும், மூட்டாள்தனம் நம்மோடு போகட்டும் நம் சந்ததியாவது பகுத்தறிவுடன் வாழட்டும் போன்ற 54 தலைப்புகளையும் தந்தை பெரியார் அவர்கள் பகுத்தறிவு பற்றி பேசிய எழுதிய கருத்துகளைக் கொண்ட நூலாகும்.

    • தொகுப்பாசிரியர்: கி.வீரமணி

    Edited by K Veeramani / EVR / EV Ramasami


     

    350.00
  • பெரியார் களஞ்சியம் – பகுத்தறிவு [2]

    180.00
    Add to cart Buy now

    பெரியார் களஞ்சியம் – பகுத்தறிவு [2]

    பெரியார் களஞ்சியம்-பகுத்தறிவு – 2
    தந்தை பெரியார்

    இந்நூல் பகுத்தறிவே நல்வழி காட்டி, நாமும் அடிகளாரும் சமுதாய நோய் தீர்க்கும் மருத்துவரே, அறிவு வழி ஆராய்ந்து நடப்பவனே நாத்திகன் – மனிதன், நான் பகுத்தறிவுவாதி. மக்களையும் சிந்திக்கச் செய்கிறேன், புத்தருக்குப் பின் எங்களைத் தவிர எவரும் அறிவு பிரச்சாரம் செய்ய தோன்றவில்லை, நம்பிக்கை வாதிகளை மறுத்து அறிவு வாதிகளாக வேண்டும், மற்றங்கள் வாழ்வில் அவசியமே, ஏழைகள் துயரம் நீங்க வழி, நாகரிகம் என்ற என்ன? புதிய கருத்துக்களை ஏற்க மறுத்து பகுத்தறிவை இழக்காதீர்!, எனக்குப் பின்பும் பிரச்சாரம் நீடிக்கும், மனிதனே சிந்தித்துப்பார்!, பகுத்தறிவில்லாதவன் காட்டுமிராண்டியே, நான் செய்வது பகுத்தறிவுத் தொண்டே, இனிவரும் உலகத்தில் சமுதாயம் முன்னேற பகுத்தறிவு வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும், பகுத்தறிவுச் சுடர், பகுத்தறிவுக் கல்வி, புதிய உலகையே உண்டாக்கியவர் அண்ணா போன்ற 43 தலைப்புகளும் தந்தை பெரியார் அவர்கள் ஒவ்வொருவருக்கும் அவசியம் இருக்க வேண்டிய பகுத்தறிவு பற்றி பேசிய, எழுதிய கருத்துகள் அடங்கிய நூலாகும்.

    • தொகுப்பாசிரியர்: கி.வீரமணி

    Edited by K Veeramani / EVR / Ramasami


     

    180.00
  • Periyar Kalanchiyam பெரியார் களஞ்சியம்-பகுத்தறிவு-3(பாகம்-35)

    பெரியார் களஞ்சியம் – பகுத்தறிவு [3]

    210.00
    Add to cart Buy now

    பெரியார் களஞ்சியம் – பகுத்தறிவு [3]

    பெரியார் களஞ்சியம்-பகுத்தறிவு-3
    தந்தை பெரியார்

    இந்நூல் பகுத்தறிவுச்சுடர் , பகுத்தறிவு கல்வி, புதிய உலகையே உண்டாக்கியவர் அண்ணா, கடவுள் வயது மூன்றாயிரமே, அய்ந்தறிவும் ஆறறிவும், சிந்திக்காதவன் மிருகமே, ஊர்தோறும் பகுத்தறிவாளர் கழகங்கள் தேவை, பகுத்தறிவு, பணிகளுக்கென்று மன்றங்கள் தேவை, பொங்கல் விழாவும் திராவிடர்களும், மூடநம்பிக்கைக்காரரை ஆசிரியராக்கினால், மின்சாரமும் மதமும், செருப்படி எதற்காக? உண்மை நாடுவோர் சங்கம், இறந்தவர்களுக்கச் செய்யப்படும் எதுவும் இறந்தவர்களுக்குச் சேராது, நாலுகடை விசாரிப்பது ஏன்? கடவுள்- மதத்தை குப்பைத் தொட்டியில் போடுங்கள், நீண்ட ஆயுளின் இரகசியம், மேல்நாட்டின் ஜோதியும் கீழ்நாட்டின் பீதியும், காட்டுமிரண்ட்டி மத்தியில் கடிதைத் தொண்டு, முட்டாள்தனம் ஒழிந்தால் முன்னேற்றம், கோயிலுக்குச் செல்வோருக்கு கேள்வி, உலகின் ஒரே பகுத்தறிவு ஆட்சி இது!, பகுத்தறிவு வாதியின் முக்கிய வேலை, தந்தை பெரியார் பகுத்தறிவு விளக்கம், இன இழிவு ஒழிய, கடவுளை ஒதுக்குங்கள், பகுத்தறிவுவாதி யார்? மனிதர்கள் கழகம். போன்ற 92 தலைப்புகளில் தந்தை பெரியார் அவர்கள் பேசிய, எழுதிய கருத்துகள் தொகுப்புகள் கொண்ட நூலாகும்.

    • தொகுப்பாசிரியர்: கி.வீரமணி

    Edited by K Veeramani  / EVR / EV Ramasawami


     

    210.00
  • மனிதகுலம் – நம்பிக்கையூட்டும் ஒரு வரலாறு

    599.00
    Add to cart Buy now

    மனிதகுலம் – நம்பிக்கையூட்டும் ஒரு வரலாறு

    மனிதகுலம் – நம்பிக்கையூட்டும் ஒரு வரலாறு
    ருட்கர் பிரெக்மன்

     

    மனிதர்கள் இயல்பிலேயே தன்னலவாதிகள் என்றும், தங்களுடைய சொந்த நலனுக்கு முன்னுரிமை கொடுத்தே அனைத்தையும் செய்பவர்கள் அவர்கள் என்றும் காலங்காலமாக நமக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டு வந்துள்ளது. இடதுசாரிகளிலிருந்து வலதுசாரிகள்வரை, வரலாற்றியலாளர்களிலிருந்து எழுத்தாளர்கள்வரை, உளவியலாளர்களிலிருந்து தத்துவவியலாளர்கள்வரை அனைவரையும் ஒன்றிணைக்கின்ற ஒரு நம்பிக்கை அது. இந்த நம்பிக்கையின் வேர்கள் மாக்கியவெல்லியிலிருந்து ஹாப்ஸ்வரை, சிக்மண்ட் பிராய்டிலிருந்து டாக்கின்ஸ்வரை மேற்கத்தியச் சிந்தனைக்குள் ஆழமாக ஊடுருவியுள்ளன.

    ‘மனிதகுலம்’ எனும் இந்நூல் ஒரு புதிய விவாதத்தை முன்வைக்கிறது. அடிப்படையில் மக்கள் நல்லவர்கள் என்று அனுமானிப்பது எதார்த்தமானதாகவும், அதே நேரத்தில் புரட்சிகரமானதாகவும் இருக்கிறது என்ற வாதம்தான் அது. மற்றவர்களோடு போட்டி போடுவதற்குப் பதிலாக அவர்களோடு ஒத்துழைப்பதற்கும், அவர்களைச் சந்தேகிப்பதற்குப் பதிலாக அவர்களை நம்புவதற்கும் நமக்கு ஏற்படுகின்ற உள்ளுணர்வு, பரிணாம அடிப்படையில் உருவான ஒன்று. மற்றவர்களைப் பற்றி மோசமாக நினைப்பது, நாம் அவர்களை எவ்வாறு பார்க்கிறோம் என்பதன்மீது மட்டுமல்லாமல், நம்முடைய அரசியல்மீதும் பொருளாதாரத்தின்மீதும் தாக்கம் ஏற்படுத்துகிறது.
    சர்வதேச அளவில் விற்பனையில் சாதனை படைத்துள்ள நூல்களை எழுதியுள்ள ருட்கர் பிரெக்மன், இந்த முக்கியமான நூலில், உலகில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பிரபலமான ஆய்வுகளில் சிலவற்றையும், பிரபலமான வரலாற்று நிகழ்வுகளில் சிலவற்றையும் எடுத்து, அவற்றை மறுவடிவமைப்பு செய்து, கடந்த 2,00,000 ஆண்டுகால மனிதகுல வரலாற்றைப் பற்றிய ஒரு புதிய கண்ணோட்டத்தை வழங்குகிறார்.

    மனித இனத்தின் இரக்க குணத்திலும், தன்னலம் பாராமல் பிறருடைய நலன்மீது அக்கறை கொள்கின்ற பண்பிலும் நம்பிக்கை கொள்வது எவ்வாறு நாம் சிந்திக்கும் விதத்தை மாற்றியமைக்கும் என்பதையும், அந்த நம்பிக்கை, நம்முடைய சமுதாயத்தில் உண்மையான மாற்றத்தை உருவாக்குவதற்கான அடித்தளமாக எவ்வாறு செயல்படும் என்பதையும் பிரெக்மன் இந்நூலில் காட்டுகிறார்.

     

    ருட்கர் பிரெக்மன், ஐரோப்பாவின் பிரபலமான இளம் வரலாற்றியலாளர்களில் குறிப்பிடத்தக்கவர். டச்சு மொழியில் எழுதப்பட்ட ‘உட்டோப்பியா ஃபார் ரியலிஸ்ட்ஸ்’ என்ற அவருடைய முந்தைய நூல், நியூயார்க் டைம்ஸ் மற்றும் சண்டே டைம்ஸ் பத்திரிகைகள் தொகுத்து வழங்குகின்ற, ‘மிகச் சிறப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கின்ற நூல்கள்’ பட்டியலில் இடம்பெற்றது. அது 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ‘த கரெஸ்பான்டென்ட்’ என்ற இணைய இதழில் அவர் எழுதிய கட்டுரைகளுக்காக, மிகப் பிரபலமான ‘ஐரோப்பியப் பத்திரிகை விருது’க்கு இரண்டு முறை அவர் பரிந்துரைக்கப்பட்டார். வாஷிங்டன் போஸ்ட் மற்றும் கார்டியன் பத்திரிகைகளிலும் அவருடைய படைப்புகள் இடம்பெற்றுள்ளன. ‘ஏழ்மை என்பது பணப் பற்றாக்குறையே அன்றி, நடத்தைப் பற்றாக்குறை அல்ல’ என்ற தலைப்பில் அவர் ஆற்றிய ‘டெட்’ சொற்பொழிவை இதுவரை 36 இலட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். ‘பிக் இஷ்யூ’ பத்திரிகை வெளியிட்ட, 2020 ஆம் ஆண்டில் ‘உலகில் மாற்றம் ஏற்படுத்திய 100 நபர்கள்’ பட்டியலில் ருட்கர் பத்தாவது இடத்தைப் பிடித்திருந்தார். அவர் நெதர்லாந்தில் வசித்து வருகிறார்.

    பக்கங்கள் 518 ரூ599

    599.00
  • இதற்குப் பெயர்தான் பார்ப்பனியம்!

    400.00
    Add to cart Buy now

    இதற்குப் பெயர்தான் பார்ப்பனியம்!

    இதற்குப் பெயர்தான்
    பார்ப்பனியம்!
    ஜெயராணி
    நாம் பேசமறுக்கும் ஜாதியத்தின்
    ஆணிவேரை அடையாளம்காட்டுதல்
    ‘‘அடிமை வகுப்பினர் சார்பாக ஒன்றைக் கூற விரும்புகிறேன்.

    இறையாளுமையும் சுதந்திரமும் பெற்ற இந்தியாவில் – வாழ்க்கைத் தத்துவம் மற்றும் சமூக அமைப்பு என்ற முறையில் – பார்ப்பனியம் முற்றிலுமாக அழித்தொழிக்கப்பட வேண்டும் என்பதைத்தான் இம்மக்கள் விரும்புகிறார்கள் என்பதில் எனக்கு எந்த அய்யமும் இல்லை.”

    – டாக்டர் அம்பேத்கர்

    வகை : கட்டுரை

    பக்கங்கள் 320 ரூ400


    400.00
  • சாதியைப் பேசத்தான் வேண்டும்

    450.00
    Add to cart Buy now

    சாதியைப் பேசத்தான் வேண்டும்

    சாதியைப் பேசத்தான் வேண்டும்
    சூரஜ் யங்டே
    இந்திய தலித் இளைய தலைமுறையினரிடையே ‘ஒரு புதிய குரல் தோன்றியிருக்கிறது’. – பார்த்தா சட்டர்ஜி
    முதல் தலைமுறை தலித் அறிஞரான சூரஜ் யங்டே அழுத்தமான உணர்ச்சிகளைத் தூண்டும் இந்தப் புத்தகத்தின் வழியே ஆழமான சாதிய நம்பிக்கைகளுக்கு சவால் விடுவதோடு அவற்றின் குழப்ப முடிச்சுகளையும் அவிழ்க்கிறார். தலித் குடியிருப்பில் வளர்ந்த அவர் நெஞ்சைப் பதற வைக்கும் பல அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். அன்றாட வாழ்வின் வலிகளையும் துன்பங்களையும் அன்பு மற்றும் நம்பிக்கையால் தாம் மீட்டெடுத்ததை விவரிக்கிறார். அரசியல், அதிகாரத்துவம் மற்றும் நீதித்துறை ஆகியவற்றில் நிலைகொண்டிருக்கும் கண்ணுக்குப் புலப்படாத சுவரை வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறார்.
    தலித் சமுதாயத்தினரிடையேயான உட்- சாதிப் பிரிவுகள், பிளவுகள், உயரடுக்கு தலித்துகளின் நடத்தை மற்றும் அடையாளப்படுத்தப்பட்ட நவீன-உலகின் தீண்டாமை போன்றவற்றைத் தைரியமாக, நேர்மையாக முன்வைக்கிறார் – அவை அனைத்தும் பிராமணீய கோட்பாடுகளின் தவிர்க்க இயலா செல்வாக்கின் கீழ் இயங்குகின்றன.
    தமிழில் : அனிதா பொன்னீலன்
    வகை : கட்டுரை
    பக்கங்கள் 384  ரூ450

    450.00
  • தீப்பற்றிய பாதங்கள்

    தீப்பற்றிய பாதங்கள்

    550.00
    Add to cart Buy now

    தீப்பற்றிய பாதங்கள்

    தீப்பற்றிய பாதங்கள்
    தலித் இயக்கம் – பண்பாட்டு நினைவு – அரசியல் வன்முறை
    டி .ஆர். நாகராஜ்
    தீப்பற்றிய பாதங்கள் நூலின் இப்புதிய பதிப்பு முழுமையாக திருத்தப்பட்ட பதிப்பு. உலகெங்கிலும் பல நூல்கள் அடுத்த பதிப்பை காணும் போது முதல்பதிப்பில் இருக்கும் குறைகளை களைந்து வெளியிடுவது இயல்பானதே. ஆனால் இந்நூலினை மொழிபெயர்த்துள்ள ராமாநுஜம் அதன் திருத்தங்களை வெறும் வார்த்தைகளையோடு நிறுத்திவிடாமல் மூல ஆசிரியரின் தொனிக்கு நெருங்கிச்செல்ல முயன்றுள்ளார். மொழியாக்கமும் வாசகரும் இணைந்து ஒரு தொனியை உருவாக்கவேண்டும் என்கிறார்.
    இப்படியாக இணைந்து ஒரு தொனியை உருவாக்குவதன் ஊடாகவே ஒரு மொழியாக்கம் அதனளவில் தனித்து நிற்கக்கூடிய ஒன்றாக மாறுகிறது. இங்கு மூலப் பிரதியின் நோக்கம், மொழியாக்கத்தின் நோக்கம், வாசகரின் நோக்கம் எல்லாம் ஒன்றிணைந்து பலவிதமான தொனிகளை உருவாக்குகின்றன.
    பொருள் குறித்த தேடலுக்குள் சிக்கிக்கொள்ளும் மொழிபெயர்புகளுள் ராமாநுஜத்தின் மொழிபெயர்ப்பு தனித்துவமானது. இதன் பொருட்டே அவர் மொழியைப் பயன்படுத்துவது ஒரு மானுடச் செயல்பாடு என்று வரையறுக்கிறார். அது பானை செய்வதுபோல், அறிவியல் செய்வதுபோல் மொழியை பயன்படுத்துவதும் ஒரு மானுடச் செயல்பாடு என்கிறார்.
    THEEP PATTIYA PATHANGAL
    தமிழில் : சீனிவாச ராமாநுஜம்
    ரூ 550
    550.00
  • ஜாதியற்றவளின் குரல்

    ஜாதியற்றவளின் குரல்

    450.00
    Add to cart Buy now

    ஜாதியற்றவளின் குரல்

    ஜாதியற்றவளின் குரல்
    ஜெயராணி

    குடிமை உரிமை / மனித உரிமை அமைப்புகள் எனத் தமிழ்நாட்டில் செயல்படும் எந்த அமைப்புடனும் ஜெயராணி தன்னை இணைத்துக்கொள்ளவில்லை என்றாலும் அவற்றின் கருத்துநிலை, நடைமுறைத் தளங்களைவிட விரிவானதும் வீச்எல்லைகள் கொண்டவையுமான பிரச்சனைகள் புலனாய்வு இதழியாளராக, மனித உரிமை ஆர்வலராக, தலித்திய எழுத்தாளராக, பெண்ணிலைவாதியாகத் தன்னை நிறுவிக் கொள்கிறார் தனது எழுத்துக்கள் மூலம். அம்பேத்கரின் உலகளாவிய மனிதநேயப் பார்வையும் பெரியாரின் சாதி ஒழிப்பு, ஆணாதிக்க எதிர்ப்பு மூடநம்பிக்கை எதிர்ப்புப் பகுத்தறிவுப் பார்வையும் – ஜெயராணி விடயங்களை பார்க்கும் புரிந்துகொள்ளும் கோணத்தை வடிவமைக்கின்றன.
    – எஸ். வி. ராஜதுரை

    ரூ : 450
    450.00
  • திரு & திருமதி ஜின்னா

    திரு & திருமதி ஜின்னா

    750.00
    Add to cart Buy now

    திரு & திருமதி ஜின்னா

    திரு & திருமதி ஜின்னா
    இந்தியாவையே திடுக்கிட வைத்த திருமணம்

    ஷீலா ரெட்டி

    1918ம் ஆண்டில் ருட்டி பெத்தித், முகமது அலி ஜின்னாவை ரகசியத் திருமணம் செய்து கொள்வதற்காகத் தன் தகப்பனாரின் மாளிகையிலிருந்து வெளியேறியதை அறிந்து, மொத்த சமூகமே அதிர்ந்தது; சீற்றமும் அடைந்தது. அவர்கள் இருவருக்குள்ளும் அத்தனை வேற்றுமைகள் – வேறு வேறு சமூகம்; வேறு வேறு மதம்; இருவருக்கும் 24 ஆண்டுகள் வயது வித்தியாசம். இது போன்ற மிக வித்தியாசமான ஓர் உறவுப் பின்னலை, ஷீலா ரெட்டி என்னும் புகழ் பெற்ற இதழியலாளர், இதுவரை வெளிவராத கடிதங்கள், நண்பர்கள் மற்றும் ஏனைய சம காலத்தினர் விட்டுச் சென்ற தகவல்கள், ஆவணங்களோடு பெரும் இரக்கமும் அக்கறையும் கலந்து வெளிக்கொணர்ந்துள்ளார். தில்லி, பம்பாய், கராச்சி போன்ற கதைமாந்தர்களின் வாழ்விடங்களில் ஆழமாகவும், மிக உன்னிப்பாகவும் ஆய்வுகள் மேற்கொண்டு ரெட்டி எழுதிய வாழ்க்கை வரலாறு இது.

    தமிழில் : தருமி

    ரூ: 750
    750.00
  • நீதி பற்றிய கோட்பாடு

    நீதி பற்றிய கோட்பாடு

    750.00
    Add to cart Buy now

    நீதி பற்றிய கோட்பாடு

    நீதி பற்றிய கோட்பாடு
    அமார்த்தயா சேன்

     

    மிக மேன்மையானதொரு புத்தகம் .. நீதி பற்றிய கோட்பாட்டைப் படிப்பது, நடைமுறைக் காரண ஆய்வில் ஒரு முதுநிலை வகுப்பில் பங்கேற்பது போன்றுள்ளது. – ஜியாவுதீன் சர்தார், தி இன்டிபென்டன்ட்

    சேன் நம் சகாப்தத்தின் சிறந்த சிந்தனையாளர்களில் ஒருவர்… பொதுஉலகிற்கான அறிவுவாழ்வினரில் ஒருவர், கலப்பற்ற தூய சிந்தனைகளின் உலகங்களையும், மிக நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தும் கொள்கைகளின் உலகங்களையும் எளிதாகத் தாண்டிச் செல்லும் திறனால் வரையறுக்கப்படுகிறார் என்றால், சேனுக்குப்
    போட்டியாளர்கள் மிக அபூர்வம். – தி டைம்ஸ்

    1971 இல் ஜான் ரால்ஸின் நீதிக் கோட்பாடு நூல் வெளிவந்ததற்குப் பின் அமார்த்தியா சேனின் நீதி பற்றிய கோட்பாடு மட்டுமே இந்தத் துறையில் மிக முக்கியமான பங்களிப்பு என்று நான் நம்புகிறேன் – ஹிலரி புட்மன், ஹார்வர்ட் பல்கலைக்கழகம்

    ‘தாராளவாத அரசியல் தத்துவத்தின் மேலாதிக்கத்தன்மை பற்றிய சேனின் குற்றநீதி அடிப்படையிலான விமரிசனம், அவர் ஆங்கிலம் பேசும் பொதுவுலகின் புகழ்பெற்ற அறிவுவாழ்வினர் என்பதை உறுதிப்படுத்துகிறது’ – நியூ ஸ்டேட்ஸ்மேன் புக்ஸ் ஆஃப் தி டிகேட்

    தமிழில் : க. பூரணச்சந்திரன்

    ரூ: 750
    750.00
  • அரசியல் சிந்தனையாளர் புத்தர்

    அரசியல் சிந்தனையாளர் புத்தர்

    350.00
    Add to cart Buy now

    அரசியல் சிந்தனையாளர் புத்தர்

    அரசியல் சிந்தனையாளர் புத்தர்
    காஞ்ச அய்லய்யா

    ‘பௌத்தம் ஒரு மதமல்ல, ஓர் அரசியல் சிந்தனை. புத்தர் ஓர் அரசியல் சிந்தனையாளர்; உலகின் பல சிந்தனையாளர்களுக்கும் தத்துவவாதிகளுக்கும் முன்னோடியாக விளங்குகிறார்’
    – காஞ்ச அய்லய்யா

    இன்றைய நவீன உலகம் அறிந்திருக்கும் பாராளுமன்ற நடைமுறை விதிகளைப் பௌத்தச் சங்கங்கள் அன்றே அறிந்திருந்தன; அவற்றைப் பின்பற்றவும் செய்தன. இருக்கைகள் எப்படி அமைக்கப்பட வேண்டும்
    என்பதற்கும் விதிகள் இருந்தன; தீர்மானங்கள் கொண்டுவருவது குறித்தும், தீர்மானங்கள் குறித்தும், குறைவெண் வரம்பு, கொறடா, வாக்குகள் எண்ணுதல், வாக்குச் சீட்டுகள் மூலம் வாக்களித்தல், ஒருவர்மீது கண்டன தீர்மானம் கொண்டுவருதல், ஒழுங்குமுறைப்படுத்துதல், தீர்ப்பு வழங்குதல் போன்ற
    அனைத்திற்கும் விதிகள் இருந்தன. …எனினும், ஒருவரது பொருளாதார, சமுதாய, அரசியல் சுதந்திரத்தின் நடைமுறைச் செயல்பாட்டில்தான் பௌத்தத்தின் சாரம் இருக்கிறது. ஜனநாயகத்தின் வழிகாட்டியாகப் புத்தர் இருந்தார். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் குறித்து தீவிரமாக அவர் பேசினார்’

    – அம்பேத்கர், அரசியல் நிர்ணய சபை உரையில்.

    தமிழில் : அக்களூர் இரவி

    Kancha Elayya / Kancha Ilaiah

    பக்கங்கள் 336  விலை ரூ 350

    350.00
  • இந்தியத் தேர்தல்களை வெல்வது எப்படி?

    இந்தியத் தேர்தல்களை வெல்வது எப்படி?

    320.00
    Add to cart Buy now

    இந்தியத் தேர்தல்களை வெல்வது எப்படி?

    இந்தியத் தேர்தல்களை வெல்வது எப்படி?
    நீங்கள் தெரிந்துகொள்ளக் கூடாது என்று அரசியல் கட்சிகள் விரும்புவது

    சிவம் சங்கர் சிங்
    (பாஜகவின் முன்னாள் தேர்தல் ஆலோசகர்)

    தமிழில் :  இ.பா. சிந்தன்

    பாஜகவின் அரசியல் பிரச்சார ஆலோசகராக இருந்த ஒருவரால் எழுதப்பட்ட இந்நூல், மறைக்கப்பட்டிருக்கும் தேர்தல் உலகிற்குள் வாசகர்களை அழைத்துச் சென்று, அங்கு தேர்தலுக்கான திட்டமிடல் எவ்வாறெல்லாம் நடத்தப்படுகிறது என்பதையும், அவற்றில் மக்களை எது ஈர்க்கும் எது ஈர்க்காது என்பதையும் மிகத்தெளிவாகப் பேசுகிறது.
    ஆய்வுகளையும், நேர்காணல்களையும், நூலாசிரியரின் சுய அனுபவங்களையும் அடிப்படையாகக் கொண்டு இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது. அரசியலும் அரசியல் கட்சிகளும் செயல்படும் விதத்தையும், வெற்றிகரமான தேர்தல் பிரச்சாரங்கள் நடத்துவதையும் விரிவாக இந்நூல் விவரிக்கிறது.
    தேர்தல் பிரச்சாரங்களில் அரசியல் ஆலோசகர்களின் பங்கு என்ன?
    நவீன தொழிற்நுட்பக் கருவிகளான தரவு பகுப்பாய்வு (data analytics), மதிப்பாய்வு மற்றும் சமூக ஊடகங்களையெல்லாம் பயன்படுத்தி அரசியல் கட்சிகள் எவ்வாறு பிரச்சாரம் செய்கிறார்கள்?
    தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பதில் பணத்தின் பங்கு என்ன?
    மக்களைப் பிளவுபடுத்தும் பிரச்சாரத்திற்கும் ஃபேக் செய்திகளைப் பரப்புவதற்கும் எவையெல்லாம் உதவி செய்கின்றன?
    இந்திய அரசியலின் எதிர்காலம் தான் என்ன?

    பக்கங்கள்: 360   ரூ320
    320.00
  • செர்னோபிலின் குரல்கள்

    செர்னோபிலின் குரல்கள்

    300.00
    Add to cart Buy now

    செர்னோபிலின் குரல்கள்

    செர்னோபிலின் குரல்கள்
    ஸ்வெட்லானா அலெக்ஸியேவிச்

    1986 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி  அன்றைய  சோவியத் ரஷ்யாவிலுள்ள  செர்னோபில் அணுமின் நிலையத்தில் நடத்தப்பட்ட கவனக்குறைவான பரிசோதனையினால் அணு உலை தீப்பிடிக்க அது கிராஃபைட்டைக் கக்கியது. இதனால் கதிர் வீச்சு கொண்ட சுமார் 50 டன் எரிபொருள் காற்றோடு கலந்து ஐரோப்பா கண்டத்தில் ஏறக்குறைய  நான்கில் மூன்று பகுதியில் பரவியது. இந்த விபத்து 48,200 ஆண்டுகளுக்கான கதிர்வீச்சுப் புளூட்டோனியத்தை விட்டுச் சென்றிருக்கிறது!.

    இதன் விளைவாக இந்த நகரம் கதிர்வீச்சு கொண்ட அயோடின், சீசியம்,ஸ்ட்ரோனாடியம் ஆகியவற்றில் 70 சதவிகிதத்தைப் பெற்றது. இந்த விபத்தினால் 485 கிராமங்கள் இருந்த இடம் தெரியாமல் புதையுண்டன. இன்றைக்கும் சுமார் ஐந்தில் ஒரு பெலாரஷ்யர்  அதாவது 2.1 மில்லியன் மக்கள் மாசடைந்த பகுதிகளிலேயே வசித்து வருவது அணுஉலைகளினால்   விபத்து நேருமானால் எத்தகைய விளைவுகளை மக்கள் எதிர்கொள்ள வேண்டிவரும் என்பதைக்  காட்டுகிறது.இவ்விபத்தில் பாதிக்கப்பட்ட பல தரப்பு மக்களையும்  சந்தித்து அவர்களின் உள்ளக் குமுறல்களையும்,உணர்ச்சிகளையும் உலகம் தெரிந்து கொள்ள வேண்டுமென ஆவணப்படுத்தியிருக்கிறார் நூலாசிரியர் ஸ்வெட்லானா அலெக்ஸியேவிச்.

    இந்நூலிற்காக 2015ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபெல் பரிசினை ஸ்வெட்லானா அலெக்ஸியேவிச் பெற்றுள்ளார்.
    தமிழில் : சித்தார்த்தன் சுந்தரம்

    Chernobilin  Kuralkal  / Chernobylin Kuralkal

    ரூ300
    300.00
  • சாம்பலாகவும் மிஞ்சாதவர்கள் 

    சாம்பலாகவும் மிஞ்சாதவர்கள் 

    160.00
    Add to cart Buy now

    சாம்பலாகவும் மிஞ்சாதவர்கள் 

    சாம்பலாகவும் மிஞ்சாதவர்கள் 
    கவின் மலர்

    தீண்டாமை ஒரு பாவச்செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை ஒரு மனிதத்தன்மையற்ற செயல்

    என்று ஏட்டளவில் மட்டும் சொல்லிக்கொடுக்கும் நம் கல்வி முறை சாதி ஒழிப்பு குறித்து என்றேனும் பேசியிருக்கிறதா?

    கல்விமுறை மட்டுமல்ல, நம் வீடுகளும் குடும்பங்களும் சாதி & மத மறுப்புத் திருமணங்களை ஏற்றுக்கொள்ளுமானால், சிறு

    வயதிலேயே சாதி என்பது உயிர்கொல்லி என்கிற கருத்தை பிஞ்சு மனங்களில் ஏற்றினால், இனி வரும் தலைமுறையிலாவது

    சாதி குறித்த வெட்டிப் பெருமிதங்களும், அதன் காரணமாக நிகழும் கௌரவக்கொலைகளும் ஓரளவுக்கேனும் குறையும் என்று நம்பலாம்.

     

    ரூ160

    160.00
  • தீர்ப்பு - இந்தியத் தேர்தல்களைப் புரிந்து கொள்ளல்

    தீர்ப்பு – இந்தியத் தேர்தல்களைப் புரிந்து கொள்ளல்

    399.00
    Add to cart Buy now

    தீர்ப்பு – இந்தியத் தேர்தல்களைப் புரிந்து கொள்ளல்

    தீர்ப்பு – இந்தியத் தேர்தல்களைப் புரிந்து கொள்ளல்
    பிரணாயி ராய்

    ஒவ்வொரு இந்தியனின் மரபணுவின் அடித்தளத்திலேயே மக்களாட்சி உணர்வு இருக்கிறது. நமது நனவு நிலைக்கு உரித்தானது அது. நமது உரையாடல்களுக்கு அது உயிரூட்டுகிறது, நமது மனங்களை ஊக்குவிக்கிறது; நம்மிடமுள்ள சிறந்தவற்றை வெளிக்கொண்டு வருகிறது. சில வேளைகளில் மோசமானவற்றையும் கூட. எவ்வளவுக்கு எவ்வளவு நாம் ஒன்றுமில்லாமல் ஆக்கப்பட்டிருக்கிறோமோ, எவ்வளவுக்கு எவ்வளவு நாம் ஏழைகளாக இருக்கிறோமோ, எவ்வளவுக்கு எவ்வளவு நாம் அந்நியப்படுத்தப்படுகிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு நாம் பங்கு கொள்கிறோம்; நமது நாட்டின் தேர்தல்களையும் மக்களாட்சியையும் பாதுகாக்கிறோம். மக்களாட்சி மேல் தாக்குதல் நடத்தப்படும் ஒவ்வொரு முறையும், இந்திய வாக்காளர் தேர்தல் நேரத்தில் திரும்பத் தாக்குகிறார். இந்தியத் தேர்தல்களின் வரலாறு விடுதலையின் வெற்றிக் கதை. மக்களாட்சிக் கருத்தியல் என்பது நமது வாக்காளர்களின் மரபணுவில் இருக்கும் அதே வேளையில், நமது மக்களாட்சியின் உட்கூறாக நமது வாக்காளர்தான் இருக்கிறார், அரசியல்வாதியல்ல.

    தமிழில் : ச வின்சென்ட்

    Theerppu – Indiya Therthalkalai Purinthu Kollal / Theerpu India therthalai

     ரூ399

    399.00
  • பெண்களை உயர்த்துவோம் சமுதாயத்தை உயர்த்துவோம்

    பெண்களை உயர்த்துவோம் சமுதாயத்தை உயர்த்துவோம்

    399.00
    Add to cart Buy now

    பெண்களை உயர்த்துவோம் சமுதாயத்தை உயர்த்துவோம்

    பெண்களை உயர்த்துவோம் சமுதாயத்தை உயர்த்துவோம்
    மெலின்டா கேட்ஸ்

    தன்னுடைய இருபதாண்டுகால சமூகப் பணியின் ஊடாக மெலின்டா கேட்ஸ் கற்றுக் கொண்டுள்ள மிக முக்கியமான விஷயம் இதுதான்: நீங்கள் ஒரு சமுதாயத்தை உயர்த்த விரும்பினால், பெண்களை அடக்கி ஒடுக்குவதை நீங்கள் உடனடியாக நிறுத்தியாக வேண்டும்.
    குழந்தைத் திருமணத்தில் தொடங்கி, பெண்களுக்குக் கருத்தடைப் பொருட்கள் எளிதில் கிட்டாமல் இருப்பது மற்றும் பணியிடத்தில் நிலவும் பாலினச் சமத்துவமின்மைவரை, நாம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய பிரச்சனைகளைப் பற்றி நம்மால் மறக்க முடியாத விதத்தில் மெலின்டா கொடுத்துள்ள விவரிப்புக்கு, அதிர்ச்சியூட்டும் உண்மைத் தகவல்கள் பக்கபலமாக விளங்குகின்றன.
    இந்நூலை உணர்ச்சிகரமாகவும் வெளிப்படையாகவும் நேர்த்தியாகவும் எழுதியுள்ள மெலின்டா, அசாதாரணமான பெண்களை நமக்கு அறிமுகம் செய்து வைப்பதோடு, ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ளுவதால் உருவாகின்ற சக்தியையும் நமக்குப் படம்பிடித்துக் காட்டுகிறார்.
    நாம் மற்றவர்களை உயர்த்தும்போது, அவர்கள் நம்மை உயர்த்துகின்றனர்.

     

    உலகின் மிகப் பெரிய தொண்டு நிறுவனமாகத் திகழுகின்ற ‘பில் & மெலின்டா கேட்ஸ் அறக்கட்டளை’யைத் தன் கணவர் பில் கேட்ஸுடன் இணைந்து தோற்றுவித்து, ஒரு கொடையாளியாகவும் தொழிலதிபராகவும் திகழுகின்ற மெலின்டா கேட்ஸ், சர்வதேச அளவில் பெண்களுக்காகவும் சிறுமியருக்காகவும் வலிமையாகக் குரல் கொடுக்கின்ற ஒரு மிகப் பெரிய ஆளுமையாகவும் விளங்குகிறார். டெக்சாஸ் மாநிலத்திலுள்ள டல்லாஸ் நகரில் பிறந்து வளர்ந்த மெலின்டா, கணினி அறிவியலில் இளங்கலைப் பட்டமும், பிறகு எம்பிஏ பட்டமும் பெற்றார். அவர் தன்னுடைய தொழில்வாழ்க்கையின் முதல் பத்தாண்டுகளை மைக்ரோசாஃப்டில் செலவிட்டார். அதன் பிறகு, அவர் அந்நிறுவனத்தைவிட்டு வெளியேறி, தன்னுடைய குடும்பத்தின்மீதும் அறப்பணிகள்மீதும் முழு கவனம் செலுத்தலானார். வாஷிங்டன் மாநிலத்திலுள்ள சியாட்டில் நகரில் அவர் தன் கணவர் பில் கேட்ஸுடன் வாழ்ந்து வருகிறார். அவர்களுக்கு ஜென், ரோரி, ஃபீபி ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர்.

    Penkalai Uyarthuvom Samuthayathai Uyarthuvom 

    பக்கங்கள் 342  விலை ரூ399

    399.00
  • பூவுலகைக் காக்க புறப்பட்ட சிறுமி - கிரெட்டா துன்பர்க்

    பூவுலகைக் காக்க புறப்பட்ட சிறுமி – கிரெட்டா துன்பர்க்

    35.00
    Add to cart Buy now

    பூவுலகைக் காக்க புறப்பட்ட சிறுமி – கிரெட்டா துன்பர்க்

    பூவுலகைக் காக்க புறப்பட்ட சிறுமி – கிரெட்டா துன்பர்க்
    ஆதி வள்ளியப்பன்

    சிறு அக்கினிக் குஞ்சாக கிரெட்டா முன்னெடுத்த போராட்டம், உலகெங்கும் உள்ள சிறார் மத்தியில் பரவி பெரும் சுடராக இன்றைக்கு ஒளிர்ந்துகொண்டிருக்கிறது. ஆர்ப்பாட்டமற்ற, அதேநேரம் உறுதியான கிரெட்டாவின் குரலுடன், லட்சக்கணக்கான குரல்கள் இன்றைக்கு இணைந்துள்ளன. ஒரு சிறுமியின் எதிர்ப்புக்குரல் இன்றைக்குப் பேரோசையாக மாறியிருக்கிறது. காலநிலை மாற்ற நெருக்கடி என்ற பிரச்சினையை உலகம் இன்றைக்கு கவனத்தில் எடுத்துக்கொள்ளத் தொடங்கியிருக்கிறது.

    “நீங்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டுமென்று நான் எதிர்பார்க்கவில்லை. நீங்கள் பேரச்சம் கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறேன். நான் நாள்தோறும் உணரும் அச்சத்தை, நீங்களும் உணர வேண்டுமென எதிர்பார்க்கிறேன். நம் வீடு தீப்பற்றி எரியும்போது என்ன செய்வோம்? அதையே இப்போதும் செய்ய வேண்டும். ஏனென்றால், நம் தாய்மண்ணான பூவுலகு பற்றி எரிந்துகொண்டிருக்கிறது.”

    ரூ35

    35.00
  • ஆனி பிராங்க் டைரிக் குறிப்புகள்

    ஆனி பிராங்க் டைரிக் குறிப்புகள்

    400.00
    Add to cart Buy now

    ஆனி பிராங்க் டைரிக் குறிப்புகள்

    ஆனி பிராங்க் டைரிக் குறிப்புகள்
    ஆனி பிராங்க்  

     

    இரண்டாம் உலகப்போரின்போது ஹிட்லரின் நாஜி முகாம் ஒன்றில் அடைக்கப்பட்டு தனது 15ஆம் வயதில் இறந்துபோன யூதச்சிறுமி ஆனி பிராங்க், தனது 13,14ஆம் வயதின் இரண்டு ஆண்டுகள் தான் மறைந்து வாழந்த வாழக்கையில் எழுதிய நாட்குறிப்பினால் உலகு ஆச்சர்யப்படத்தக்க விதத்தில் தெரிய வந்தவள். நாட்குறிப்புகளின் தொகுப்பு – உலகையே குலுக்கிய புத்தகம் – நாஜிகள் நடத்திய அக்கிரமங்களையும், அடக்குமுறைகளையும் நேருக்கு நேர் பார்த்து எழுதி வைத்துவிட்டுப்போன குறிப்புகளின் தொகுப்பே இந்நூல். 70க்கும் மேற்பட்ட மொழிகளில் வந்த இந்நூல் இப்போது முதல்முறையாக தமிழில்.

    தமிழில் : உஷாதரன்

    Anni Frankin Diary Kurippukal 

    ரூ400

    400.00
  • எங்கே செல்கிறது இந்தியா?

    எங்கே செல்கிறது இந்தியா?

    350.00
    Add to cart Buy now

    எங்கே செல்கிறது இந்தியா?

    எங்கே செல்கிறது இந்தியா?
    கைவிடப்பட்ட கழிப்பிடங்கள்/ தடைபட்ட வளர்ச்சிகள்/ சாதியத்தின் விலைகள்

     டியானே காஃபே ,  டீன் ஸ்பியர்ஸ்

    இந்த உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் கடந்த நூற்றாண்டுகளைவிட ஆரோக்கியமாக வாழ்கிறார்கள். ஏனென்றால் அதன் ஒருபகுதியாக வளரும் குழந்தைகளிடமிருந்து மலக்கழிவுக்கிருமிகளை கழிப்பிடங்களும், கழிப்பறைகளும் அப்பால் வைக்கின்றன. இந்தியா மட்டும் இதில் விதிவிலக்காக உள்ளது. பெரும்பாலான இந்தியர்கள் கழிப்பறைகளையோ அல்லது கழிப்பிடங்களையோ பயன்படுத்துவதில்லை. அதனால், அருகில் உள்ள ஏழை நாடுகளைவிட இந்தியாவில் குழந்தைகள் மிகவும் அதிகமாக இறந்துவிடுகின்றன. இந்தியாவிலுள்ள குழந்தைகள் சஹாரா –ஆஃப்ரிக்க துணைக்கண்டத்திலுள்ள குழந்தைகளைவிட வளர்ச்சி தடைபட்டவர்களாக உள்ளார்கள். இந்தியாவின் திறந்தவெளி மலம் கழிப்பு வறுமையினால் அல்ல: சாதிய அமைப்புமுறை, தீண்டாமை, சடங்குபூர்வ புனிதம், தீட்டு ஆகியவற்றின் நேரடி விளைவுகளாலேயே என்பதை ‘எங்கே செல்கிறது இந்தியா?’ மெய்ப்பித்துக் காட்டுகிறது.

     தமிழில் : செ  நடேசன்

    Where India Goes: Abandoned Toilets, Stunted Development and the Costs of Caste
    Enke Selkirathu India Enke Selgirathu Indiya
    ரூ350

    350.00
  • எண்ணெய் மற மண்ணை நினை

    எண்ணெய் மற மண்ணை நினை

    180.00
    Add to cart Buy now

    எண்ணெய் மற மண்ணை நினை

    எண்ணெய் மற மண்ணை நினை
    வந்தனா சிவா

    பருவப் பிறழ்ச்சி பெட்ரோல் பயன்பாட்டை குறைக்கவும் கார்பன் வெளியீட்டைக் குறைக்கவும் நம்மை கோருகிறது. மையப்படுத்தப்படாத ஆற்றல் செலவீட்டுக் குறைப்பை கோருகிறது, பெட்ரோல் பயன்பாட்டின் உச்சமும் பெட்ரோல் மலிவு விலையில் கிடைத்து வந்ததும் மனித குலத்தின் வளர்ச்சி என்ற கருதுகோள் குறித்த இலக்கணத்தை மாற்றி அமைக்க் நெருக்கிறது. பெட்ரோல் பயன்பாடற்ற வாழக்கையை கற்பனை செய்யுமாறு நிர்பந்திக்கப்படுகிறோம். ஒரு மில்லியன் மக்கள் உணவுரிமை மறுக்கப்பட்டு பசியாலும் சத்தின்மையாலும் தள்ளப்பட்டிருக்கிறார்கள், அவர்களுடன் இன்றைய உணவு நெருக்கடியால் மேலும் ஒரு மில்லியன் மக்கள் சேர்க்கப்பட உள்ளனர்.

    Vanthana Siva

    ரூ180

    180.00
  • நீராதிபத்தியம்

    நீராதிபத்தியம்

    250.00
    Add to cart Buy now

    நீராதிபத்தியம்

    நீராதிபத்தியம்
    சர்வதேச தண்ணீர் நெருக்கடியும் தண்ணீர் ஓர் உரிமை என்பதற்காக எழுந்து கொண்டிருக்கும் போராட்டமும்

    மாட் விக்டோரியா பார்லோ



    இந்த பூமியின் நீர்நிலைகளின் வளம் என்பது என்ன, அவை எவ்வாறு இருந்தன, அவற்றின் தற்போதைய நிலை என்ன, இந்த நிலை தொடர்ந்தால் அந்த நீர் நிலைகளுக்கு என்ன நேரும், இந்த நீர்நிலைகளைப் பாதுகாக்க அரசியல் மற்றும் சமூக தளங்களில் செளிணிய வேண்டியது என்ன என்று ஒரு பரந்த வெளியில் இருந்து இந்த புத்தகத்தை நமக்கு வழங்கியுஷீமீளார் பார்லோ. இந்த புத்தகத்தின் வாயிலாக பார்லோ கோருவது ஒன்றே ஒன்றுதான்: இந்த புவியின் தண்ணீரைக் காப்பாற்ற சர்வதேச அளவில் அனைவரையும் பொறுப்பேற்கச் செளிணிகின்ற, ஐ.நா. மட்டத்தில் நிறைவேற்றத்தக்க ஒரு சர்வதேச உடன்படிக்கைதான்.

    தமிழில் : சா  சுரேஷ்
    A cautionary account of climate change and the global water supply. “You will not turn on the tap in the same way after reading this book.” ―Robert Redford
    ரூ250

    250.00
  • கஷ்மீரி தேசியத்தின் பல்வேறு முகங்கள்

    கஷ்மீரி தேசியத்தின் பல்வேறு முகங்கள்

    499.00
    Add to cart Buy now

    கஷ்மீரி தேசியத்தின் பல்வேறு முகங்கள்

    .
    பனிப்போர் முதல் இன்று வரை
    நந்திதா ஹக்ஸர்

     


    கஷ்மீர் தேசியத்தின் பல்வேறு முகங்களை ஆழமாக விவரிக்கும் நந்திதா ஹக்ஸரின் இந்தநூல் கஷ்மீரிகளை, கஷ்மீர் பிரச்சனைகளைப் புரிந்துகொள்ள, கஷ்மீரிகளின் அர்த்தமுள்ள நியாயங்களை உணர்வுப்பூர்வமாக அறிந்துகொண்டு நல்ல தீர்வுகளை சிந்திக்க நம்மை வற்புறுத்துகிறது.

    இந்த நூல் கஷ்மீரி தேசியத்தின் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட வரலாற்றின் தடயங்களை பனிப்போர் காலங்களில் அரசியலில் ஈடுபாடுகொண்ட கம்யூனிச தொழிற்சங்கத் தலைவரான கஷ்மீரி பண்டிதர் சம்பத் பிரகாஷ் மற்றும் கஷ்மீரி முஸ்லீம் அஃப்ஸல் குரு ஆகிய இரண்டு மனிதர்களின் வாழ்க்கை மூலமாகக் கண்டறிகிறது. பனிப்போர் முடிந்து, சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்து, பயங்கரவாதத்தின் மீதான போர் துவங்கிய காலகட்டத்தில் அஃப்ஸல் குரு கஷ்மீர் கிளர்ச்சியின் துவக்கத்தில் அரசியல்ரீதியாக ஈடுபாடுகொண்டவர். இந்தவகையில் இன்னும் பலரது கதைகளும் இதில் பின்னிப்பிணைந்துள்ளன.
    தமிழில் : செ நடேசன்
    ரூ499
    499.00