Tamil Atheist Books / தமிழ் புத்தகங்கள்

Showing 25–48 of 99 results

Show Grid/List of >5/50/All>>
  • நகைக்கத்தக்கதல்ல அம்பேத்கர் கேலிச்சித்திரங்கள்

    499.00
    Add to cart Buy now

    நகைக்கத்தக்கதல்ல அம்பேத்கர் கேலிச்சித்திரங்கள்

    நகைக்கத்தக்கதல்ல
    அம்பேத்கர் கேலிச்சித்திரங்கள்
    1932- 1956

    இவ்வரலாறு, வேறெதனையும் போலின்றி, நீங்கள் நகைத்துக் கொண்டிருப்பதை பரிசீலிக்குமாறு கேட்டுக் கொள்கிறது.
     
    1949இல் நத்தையில் சவாரி செய்யும் அம்பேத்கரை சாட்டையால் விளாசும் ஜவஹர்லால் நேருவை சித்தரிக்கும் சங்கரின் கேலிச் சித்திரம், பள்ளிப் பாட நூலில் சேர்க்கப்பட்டிருந்தது தலித் எதிர்ப்பை கிளப்பிற்று. கலையின் சுதந்திரம் என்ற ரீதியில் சவர்ணர்கள் எதிர்வினையாற்றினார்.அப்போது ஆய்வு மாணவரும் கேலிச்சித்திரருமான உண்ணாமதி சியாமா சுந்தர், ஆங்கில மொழி அச்சுப் பதிப்புகளில் வெளியாகியுள்ள, அம்பேத்கர் குறித்த கேலிச் சித்திரங்களை ஆவண காப்பகங்களில் தேடிச் சேகரித்தார். சங்கர்,என்வர் அகமத், ஆர்.கே. லட்சுமண் உள்ளிட்டவர்கள் வரைந்து, இந்தியாவின் முன்னணி பிரசுரங்களில் வெளியாகியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கேலிச்சித்திரங்கள், அம்பேத்கர் மீதான வக்கிரமானதும் சிந்தனையற்றதுமான காழ்ப்புணர்வை அப்பட்டமாக்கியிருப்பது தெரிய வந்தது. ஒவ்வொரு கேலிச்சித்திரத்துடன் இணைந்துள்ள கடுமையான விமர்சனக்குறிப்பு,வரலாற்றில் தவறாக சித்தரிக்கப்பட்டவரின் அசலான வாழ்க்கை வரலாற்றினை முன்வைக்கிறது.
    இதற்கு முன் நாம் பார்த்திராத பாபாசாகிபை இந்நூல் நமக்கு வழங்குகிறது – விஜேத குமார்

    தெரிவும் தொகுப்பும் : உண்ணாமதி சியாம சுந்தர்
    தமிழில் : சா. தேவதாஸ்
    வகை : வரலாறு

    பக்கங்கள்  416  ரூ499

    499.00
  • சாதியைப் பேசத்தான் வேண்டும்

    450.00
    Add to cart Buy now

    சாதியைப் பேசத்தான் வேண்டும்

    சாதியைப் பேசத்தான் வேண்டும்
    சூரஜ் யங்டே
    இந்திய தலித் இளைய தலைமுறையினரிடையே ‘ஒரு புதிய குரல் தோன்றியிருக்கிறது’. – பார்த்தா சட்டர்ஜி
    முதல் தலைமுறை தலித் அறிஞரான சூரஜ் யங்டே அழுத்தமான உணர்ச்சிகளைத் தூண்டும் இந்தப் புத்தகத்தின் வழியே ஆழமான சாதிய நம்பிக்கைகளுக்கு சவால் விடுவதோடு அவற்றின் குழப்ப முடிச்சுகளையும் அவிழ்க்கிறார். தலித் குடியிருப்பில் வளர்ந்த அவர் நெஞ்சைப் பதற வைக்கும் பல அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். அன்றாட வாழ்வின் வலிகளையும் துன்பங்களையும் அன்பு மற்றும் நம்பிக்கையால் தாம் மீட்டெடுத்ததை விவரிக்கிறார். அரசியல், அதிகாரத்துவம் மற்றும் நீதித்துறை ஆகியவற்றில் நிலைகொண்டிருக்கும் கண்ணுக்குப் புலப்படாத சுவரை வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறார்.
    தலித் சமுதாயத்தினரிடையேயான உட்- சாதிப் பிரிவுகள், பிளவுகள், உயரடுக்கு தலித்துகளின் நடத்தை மற்றும் அடையாளப்படுத்தப்பட்ட நவீன-உலகின் தீண்டாமை போன்றவற்றைத் தைரியமாக, நேர்மையாக முன்வைக்கிறார் – அவை அனைத்தும் பிராமணீய கோட்பாடுகளின் தவிர்க்க இயலா செல்வாக்கின் கீழ் இயங்குகின்றன.
    தமிழில் : அனிதா பொன்னீலன்
    வகை : கட்டுரை
    பக்கங்கள் 384  ரூ450

    450.00
  • கதையும் புனைவும் - புனைவாக்கம் குறித்து ஓர் உரையாடல்

    கதையும் புனைவும் – புனைவாக்கம் குறித்து ஓர் உரையாடல்

    250.00
    Add to cart Buy now

    கதையும் புனைவும் – புனைவாக்கம் குறித்து ஓர் உரையாடல்

    கதையும் புனைவும் – புனைவாக்கம் குறித்து ஓர் உரையாடல்
    வெங்கடேசன்
    நேர்காணல் : த. ராஜன்
    புத்தகத்தின் தலைப்பைத் தாண்டியும் புனைவாக்கம் தொடர்பான பல விஷயங்களைப் பேசுகிறது. வெறும் உத்திகளாக மட்டுமே பார்க்கப்பட்டுக் கொண்டிருந்த பல புனைவாக்கக் கூறுகளையும் பரிசோதனை மாதிரிகளையும் புனைவு வரலாற்றோடும் சமகால சமூக இயக்கத்தோடும் பொருந்திப் புரிந்துகொள்ள வேண்டுகிறது.முப்பதாண்டு காலத்திற்கும் மேலாக புதிய கோட்பாடுப் பார்வைகள் வற்புறுத்திவரும் பிரதி வாசிப்பு முறைகளை இதுகாறும் புரிந்துகொள்ளப்பட்ட விதத்திலிருந்து வேறுபட்ட விதத்தில் அல்லது சற்றே முன்னேற்றப்பட்ட விதத்தில் சொல்லிப்பார்க்கிறது. குறிப்பிடத்தக்க முக்கியமான புனைவுகளைத் தமிழுக்குத் தந்திருக்கும் ஆசிரியரின் விரிவான புனைவாக்க அனுபவம் இதற்கான அடிப்படைத் தகுதி ஆகிறது.
    ரூ  250
    250.00
  • சிறுவர்களுக்கான தத்துவம்

    சிறுவர்களுக்கான தத்துவம்

    300.00
    Add to cart Buy now

    சிறுவர்களுக்கான தத்துவம்

    சிறுவர்களுக்கான தத்துவம்
    சிந்தித்தல், படித்தல், எழுதுதல்

     

    சுந்தர் சருக்கை
    ஓவியங்கள்: ப்ரியா குரியன்
    தமிழில்: த.ராஜன், சீனிவாச ராமாநுஜம்
    இந்தப் புத்தகம், இன்னொரு பாடம் குறித்த மற்றுமொரு புத்தகம் அல்ல. இந்தப் புத்தகம், நீங்கள் படிக்கும் பாடங்களை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்வதற்கு உங்களைத் திறன்பெற்றவர்களாக ஆக்க முயல்கிறது. தத்துவ அடிப்படையில் சிந்திப்பது நீங்கள் மேலும் சுதந்திரமானவர்களாக, விமர்சனபூர்வமானவர்களாக, படைப்பூக்கமிக்கவர்களாக மாறுவதற்கு அவசியமான திறனை உங்களுக்குக் கொடுக்கும். நீங்கள் படிக்கும்போது, எழுதும்போது, சிந்திக்கும்போது, மொழியைப் பயன்படுத்தும்போது, கணிதத்தில் ஈடுபடும்போது, ஒரு படத்தை வரையும்போது, நல்ல மனிதராக இருக்கும்போது அல்லது எதையோ கற்றுக்கொள்ளும்போது உண்மையில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று இந்தப் புத்தகம் உங்களைச் சிந்திக்கத் தூண்டும். ஒவ்வொரு வகுப்பறையிலும், ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகம்!
    Art Paper, Multi colour Printing, Illustrated edition.
    ரூ 300
    300.00
  • தீப்பற்றிய பாதங்கள்

    தீப்பற்றிய பாதங்கள்

    550.00
    Add to cart Buy now

    தீப்பற்றிய பாதங்கள்

    தீப்பற்றிய பாதங்கள்
    தலித் இயக்கம் – பண்பாட்டு நினைவு – அரசியல் வன்முறை
    டி .ஆர். நாகராஜ்
    தீப்பற்றிய பாதங்கள் நூலின் இப்புதிய பதிப்பு முழுமையாக திருத்தப்பட்ட பதிப்பு. உலகெங்கிலும் பல நூல்கள் அடுத்த பதிப்பை காணும் போது முதல்பதிப்பில் இருக்கும் குறைகளை களைந்து வெளியிடுவது இயல்பானதே. ஆனால் இந்நூலினை மொழிபெயர்த்துள்ள ராமாநுஜம் அதன் திருத்தங்களை வெறும் வார்த்தைகளையோடு நிறுத்திவிடாமல் மூல ஆசிரியரின் தொனிக்கு நெருங்கிச்செல்ல முயன்றுள்ளார். மொழியாக்கமும் வாசகரும் இணைந்து ஒரு தொனியை உருவாக்கவேண்டும் என்கிறார்.
    இப்படியாக இணைந்து ஒரு தொனியை உருவாக்குவதன் ஊடாகவே ஒரு மொழியாக்கம் அதனளவில் தனித்து நிற்கக்கூடிய ஒன்றாக மாறுகிறது. இங்கு மூலப் பிரதியின் நோக்கம், மொழியாக்கத்தின் நோக்கம், வாசகரின் நோக்கம் எல்லாம் ஒன்றிணைந்து பலவிதமான தொனிகளை உருவாக்குகின்றன.
    பொருள் குறித்த தேடலுக்குள் சிக்கிக்கொள்ளும் மொழிபெயர்புகளுள் ராமாநுஜத்தின் மொழிபெயர்ப்பு தனித்துவமானது. இதன் பொருட்டே அவர் மொழியைப் பயன்படுத்துவது ஒரு மானுடச் செயல்பாடு என்று வரையறுக்கிறார். அது பானை செய்வதுபோல், அறிவியல் செய்வதுபோல் மொழியை பயன்படுத்துவதும் ஒரு மானுடச் செயல்பாடு என்கிறார்.
    THEEP PATTIYA PATHANGAL
    தமிழில் : சீனிவாச ராமாநுஜம்
    ரூ 550
    550.00
  • டைகரிஸ்

    டைகரிஸ்

    500.00
    Add to cart Buy now

    டைகரிஸ்

    டைகரிஸ்
    ச. பாலமுருகன்
    இந்த நாவல் 1914 தொடங்கி 1918 வரையிலான காலம்வரை தன் எல்லைகளை வரையறுத்துக் கொண்டுள்ளது. அது முதல் உலகப் போரின் காலம். நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவு நமது கிராமங்கள் மற்றும் நகரங்களில் இருந்து போருக்குப் போனவர்கள் ஏராளம்.
    வரலாறுகளில் இந்தியர்களின் பெரும் பங்களிப்பு மறைக்கப்பட்டது. பிரிட்டிஷ் என்ற ஒற்றை அடைமொழி மட்டுமே தரப்பட்டது. அந்த அடையாளம் வெள்ளையர்களுக்கானது. இந்தியர்கள் அதில் அடங்கவில்லை. வரலாற்றிலிருந்து மட்டுமல்ல ஏதோ ஒரு வகையில் நம் நினைவுகளிலிருந்தும் அந்த பங்களிப்பை நீக்க வேண்டும் என அவர்கள் விரும்பினர். ஏறக்குறைய அதில் அவர்கள் வெற்றியும் பெற்றனர்.
    போரிலிருந்து திரும்பியவர்களுக்கு உரிய அங்கீகாரம், உதவிகள் கூட மறுக்கப்பட்டது. போர் முடிந்த பின்பு போர்களத்தில் இறந்தவர்களின் கல்லறைகள், சவக் குழிகள் தோண்டி எடுக்கப்பட்டது. மீண்டும் மரியாதையுடன் மறு புதைப்பு நடத்தப்பட்டது. அந்த மரியாதை கூட இந்திய படை வீரர்களுக்கு கிடைக்கவில்லை.
    போருக்கு ஒருவனை அனுப்பி வைக்க ஒரு சமூகத்தில் பல தரப்பட்ட நியாயங்கள், கதைகள், பெருமைகள் கட்டமைக்கப்படுகின்றன. அது சாகசத்தின் வெளிப்பாடாகவும் தேசபக்தியின் வடிவமாகவும் நிலை நிறுத்தப்படுகிறது. எல்லாக் காலத்திலும் அவைகள் ஒன்று போலவே உள்ளன. ஆனால் களம் வேறு வகையான காட்சிகளைக் காட்டுகிறது. போருக்குப் போய் வந்தவனிடம் கடைசியாக எஞ்சி நிற்கும் கேள்வி போர் என்பது எதற்காக என்பதுதான். அன்றைய மெசபடோமியா என்ற இன்றைய ஈராக்கில் பாயும் டைகரிஸ் எனும் நதி அந்தப் பெரும் போரின் சாட்சியமாய் வாழ்ந்து பாய்கின்றது. அவள் ஆயிரக்கணக்கான இந்திய போர் வீரர்கள் மற்றும் கணக்கில் வைக்கப்படாத தொழிலாளர்கள் என்று கிராமத்திலிருந்து போரின் போது உடன் இருந்த இந்தியக் கூலிகளின் கதைகளை அறிந்தவள். சலசலக்கும் அந்த டைகரிஸ் நதியின் ஓசையில் அந்த கதைகளை நீங்கள் கேட்கக் கூடும்.
    ரூ 550
    500.00
  • யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது

    யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது

    900.00
    Add to cart Buy now

    யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது

    யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது
    ஹெமிக்வே

     

    யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது’ 1940களில் எர்னஸ்ட் ஹெமிக்வே எழுதிய மிக புகழ் பெற்ற புதினம் ஆகும்.
    இது சர்வதேச படைஅணியை சேர்ந்த ‘ராபர்ட் ஜோர்டான்’ என்கிற இளம் அமெரிக்க இளைஞனின் கதையை சொல்லி செல்கிறது. இப்படை ஸ்பானிய உள்நாட்டு போரின் போது குடியரசு கெரில்லாக்களுடன் இணைந்து செயல்பட்டது.
    செகோவிய நகரம் மீது அமைந்துள்ள ஒரு பாலத்தை தாக்குதல் நடத்தி அழிக்க கூடிய பொறுப்பு அவனிடம் தரப்படுகிறது.
    ஹெமிங்க்வேயின் படைப்புகளிலேயே மிக சிறந்தது என அவரின் சரிதையை எழுதிய ‘ஜெப்ப்ரே மேர்ஸ்’ இந் நாவலை பற்றி குறிப்பிடுகிறார்.
    YARUKKAKA INTHA MANI OLIKKIRATHU
    தமிழில் : சி சீனிவாசன்
    ரூ 900
    900.00
  • கோடீஸ்வரர்களின் சிந்தனை இரகசியங்கள்

    கோடீஸ்வரர்களின் சிந்தனை இரகசியங்கள்

    250.00
    Add to cart Buy now

    கோடீஸ்வரர்களின் சிந்தனை இரகசியங்கள்

    கோடீஸ்வரர்களின் சிந்தனை இரகசியங்கள்

    செல்வக்குவிப்பு உத்திகளில் வல்லவராதல்

    ஹார்வ் எக்கர்

    பெரும்பாலான மக்கள் பொருளாதாரரீதியாகக் கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கும்போது, ஒரு சிலரால் மட்டும் எப்படி எளிதாகச் செல்வத்தைக் கவர்ந்திழுக்க முடிகிறது? அதைப் பற்றி ஆராய்ந்து, தன் சுயமுயற்சியால் பெரும் கோடீஸ்வரராக ஆகியிருக்கும் ஹார்வ் எக்கர், பொருளாதார வெற்றியை அடைவதோடு கூடவே அதைத் தக்கவைத்துக் கொள்வது எப்படி என்பதை இந்நூலில் விளக்குகிறார்.

    ஹார்வ் எக்கர் வெளிப்படுத்துகின்ற முக்கியமான விஷயங்களில் சிலவை: –

    செல்வத்தைக் கவர்ந்திழுக்கின்ற புதிய நம்பிக்கைகளை உங்கள் ஆழ்மனத்தில் பதிய வைக்கக்கூடிய சக்தி வாய்ந்த பிரகடனங்கள்.

    பெரும் பணத்தையும் செல்வத்தையும் உருவாக்க உதவுகின்ற ஆற்றல்மிக்க உத்திகள்.

    உண்மையான செல்வந்தர்களைத் தவிர வேறு யாரும் அறிந்திராத விஷயங்கள்.

    அனைத்து விதமான பொருளாதாரப் பிரச்சனைகளுக்கான மூலகாரணங்கள்.

    நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போதுகூட உங்களுக்குப் பணம் ஈட்டிக் கொடுக்கின்ற ‘உழைப்பில்லாத வருவாயை’ உருவாக்குவதற்கான வழிகள்?

     

    “நன் ஹார்வ் எக்கரின் ன் தாக்கங்களைப் பல ஆண்டுகளாகப் பார்த்து வியந்துள்ளேன். நன் இப்புத்தகத்தை வெகுவாகப் புரிந்துரைக்கிறேன்”
     –  ஜாக் கேன்பீல்டு , ஊக்குவிப்பு பேச்சாளர், நூலாசிரியர்

    எழுத்தாளர் பற்றி

    பிறருக்குத் தான் கற்றுக் கொடுக்கின்ற கொள்கைகளைத் தன் வாழ்க்கையில் பயன்படுத்தி, ஹார்வ் எக்கர் இரண்டரை ஆண்டுகளில் ஒரு கோடீஸ்வரராக ஆனார். அதற்குப் பின் அவர் வட அமெரிக்காவிலேயே மிகப் பெரிய வெற்றியைப் பயிற்றுவிக்கும் நிறுவனம் ஒன்றைத் துவக்கினார். அவருடைய பயிலரங்குகளில் கலந்துகொள்ள உலகெங்கிலுமிருந்து மக்கள் குவிகின்றனர். இதுவரை அவர் கற்றுக் கொடுத்த விஷயங்களால் பத்து இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் மக்கள் பயனடைந்துள்ளனர். முதன் முறையாக அதே கொள்கைகளை அவர் இந்நூலின் வாயிலாக நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். இதைப் படித்து நீங்களும் ஒரு கோடீஸ்வரராக ஆகுங்கள்!

    பக்கங்கள் 226 விலை ரூ 250

    250.00
  • வாக்குறுதி

    வாக்குறுதி

    499.00
    Add to cart Buy now

    வாக்குறுதி

    வாக்குறுதி
    நவீன சீனாவில் காதலும் இழப்பும்

    சின்ரன்

    ”ஒரே சீனக் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு தலைமுறையினரையும், அவர்களின் வேறுபட்ட வாழ்க்கைப் பாதைகளையும் பதிவு செய்திருப்பதன் மூலம், நாட்டில் நிலவிய அரசியலாலும் நவீனத்துவத்தின் எழுச்சியாலும் சீனாவின் சமூக நெறிமுறைகள் எத்தகைய மாற்றங்களுக்கு உண்டாகின என்பதை சின்ரன் இப்புத்தகத்தின்வழி சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.”
    – நியூயார்க் டைம்ஸ்

    ”சின்ரன் மிக அற்புதமான கதைசொல்லி, ’வாக்குறுதி’ நம்மை ஆட்கொள்ளக்கூடிய சிறப்பானதொரு நூல்.”
    – வாஷிங்டன் புக் ரிவ்யூ

    ”தொலைந்துபோன தலைமுறையின் குறிப்புகளை மீட்டெடுத்து வரலாற்றுப் பதிவாக்கியுள்ள பிரமாதமான நூல்.”
    – கிர்கஸ் ரிவ்யூ

    தமிழில் : சசிகலா பாபு

    ரூ : 499
    499.00
  • மயில் புராணம்

    மயில் புராணம்

    270.00
    Add to cart Buy now

    மயில் புராணம்

    மயில் புராணம்
    பாகிஸ்தானிய சிறுகதைகள்

     

     

    இந்த்ஜார் ஹுசைன்

    இந்த்ஜார் ஹுசைன் பாகிஸ்தான் எழுத்தாளர். இவர் தன்னை ‘கனவுகளின் வியாபாரி’ என்று கூறிக்கொள்கிறார். இவருடைய சிறுகதைகளைப் படித்தவுடன் இவர் ‘கனவுகளின் வியாபாரி’ அல்ல, சமுதாயத்திற்கு தேவையான ‘தன்வந்தரி’ என்ற எண்ணம் நமக்குள் தோன்றுகிறது.

    தீவிரமான விஷயங்களை நுணுக்கமாகச் சொல்கிறார். குரான், பைபிள், இராமாயணம் மகாபாரதம், புத்த, சமண நூல்களை நன்கு கற்றரிந்தவர். அவர் கதைகளில் அதைக் காணலாம். இதுபோன்ற படைப்புகளே உலகத்தைச் சுருக்கி நம் கனவுகளையும் அனுபவங்களையும் விரிவடையச் செய்பவை.

    தமிழில் : கே. நல்லதம்பி

    ரூ: 270
    270.00
  • ஒரு வாழ்க்கை, சில சிதறல்கள்

    ஒரு வாழ்க்கை, சில சிதறல்கள்

    160.00
    Add to cart Buy now

    ஒரு வாழ்க்கை, சில சிதறல்கள்

    ஒரு வாழ்க்கை, சில சிதறல்கள்
    அராபிய பெண்ணியச் சிறுகதைகள்
    மத்திய கிழக்கு நாடுகள் தொடங்கி வடக்கு ஆப்பிரிக்கா வரையிலான வெவ்வேறு தேசங்களைச் சேர்ந்த சமகால பெண் படைப்பாளிகளின் சிறுகதைகள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. பழமையான பண்பாட்டு விதிமுறைகள், புதிய தேவைகள், திருமணம், தாய்மை, காதல், கல்வி, பணி மற்றும் சுதந்திரம் என்று நவீன காலப் பெண்கள் அராபியச் சூழலில் எதிர்கொள்ளும் அனைத்து விதமான சிக்கல்களையும் இவை நுணுக்கமாகப் பேசுகின்றன. எதிர் பாலினங்களுக்கிடையேயான உறவுமுறைகளை ஆராய்வதோடு வழமையான பண்பாடுகளை கேள்விக்கு உட்படுத்தவும் செய்கின்றன. இந்தக் கதைகளினூடாக உருவகப்படும் நவீன அராபியப் பெண்ணின் சித்திரத்தின் வழியே அவர்களுடைய வாழ்க்கைமுறையையும் எண்ணப்போக்குகளையும் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

    தொகுப்பும் மொழியாக்கமும் : ஜான்சி ராணி

    ரூ: 160
    160.00
  • லிபரேட்டுகள் - பாகம் 1

    லிபரேட்டுகள் – பாகம் 1

    120.00
    Add to cart Buy now

    லிபரேட்டுகள் – பாகம் 1

    லிபரேட்டுகள் – பாகம் 1
    தரணி ராசேந்திரன்

    அவன் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வேட்டையாடக் காட்டிற்குச் சென்றான். மூன்று நான்கு மணிநேரம் சுற்றி அலைந்தும் அவனால் எந்த ஒரு பெரிய விலங்கையும் சுட்டுக் கொல்ல முடியவில்லை. சுரங்கத்திற்குத் திரும்பி வந்தான். அங்கு வேலை பார்த்த அடிமைகளில் வயதானவர்களில் பத்து பேர்களைப் பிடித்து வரச்சொல்லி அவர்களை சுட்டுக்கொன்று ஆவேசத்துடன் கத்திக் கூச்சலெழுப்பினான். அன்று இரவு ஆப்பிரிக்கா, ஆசிய அடிமைப் பெண்களை இழுத்துவரச் சொல்லி அவன் ஆட்களை விட்டுப் புணரச்செய்து அதைப் பார்த்து ரசித்தான். பெரிய வாள் கொண்டு புணரப்பட்ட அடிமைகளின் பிறப்புறுப்பு, பிட்டம், மார்பு, முகம், தலை என அவன் உடல் சோர்வுறும் வரை வெட்டி வீசினான்.

    ரூ : 120
    120.00
  • காஃப்கா – கடற்கரையில்

    காஃப்கா – கடற்கரையில்

    900.00
    Add to cart Buy now

    காஃப்கா – கடற்கரையில்

    காஃப்கா – கடற்கரையில்
    ஹருகி முரகாமி

    தனது பதினைந்தாவது பிறந்தநாளன்று காஃப்கா டமூரா வீட்டை விட்டு ஓடிப் போகிறான். அவன் அப்பாவின் சாபம் ஓரு நிழலைப் போல அவன் மீது படிந்திருக்கிறது.

    முதியவர் நகாடா, தொலைந்த பூனைகளைக் கண்டுபிடிக்கும் திறன் கொண்டவர், சிறுவயதில் தனக்கு நிகழ்ந்த விபத்தின் விளைவுகளில் இருந்து அவரால் மீள முடிவதில்லை. எதிர்பாராத ஒரு தருணத்தில் அவருடைய எளிய வாழ்க்கை தடம்புரண்டு தலைகீழாக மாறுகிறது.

    இவர்களிருவரின் உலகங்களும் இரு இணைகோடுகளைப் போல பயணிக்க, பூனைகள் மனிதர்களோடு உரையாடுகின்றன, வானிலிருந்து மீன்கள் மழையாகப் பொழிகின்றன, ஒரு விலைமாது ஹேகலைப் பற்றித் தீவிரமாக விவாதிக்கிறாள், இரண்டாம் உலகப் போரின் காலத்தில் தொலைந்து போன இரு வீரர்கள் வயதே கூடாதவர்களாக காட்டுக்குள் மறைந்து வாழ்கிறார்கள். குரூரமான முறையில் ஒரு கொலை நடக்கிறது, ஆனால் கொலை செய்தவரோ கொலையுண்டவரோ யாருடைய அடையாளங்களும் வெளிப்படையாகச் சொல்லப்படுவதில்லை. இவையாவும் சேர்ந்து ஒரு மாயப் புனைவுவெளியை உருவாக்குகின்றன.

    தமிழில் : கார்த்திகைப் பாண்டியன்

    ரூ : 900
    900.00
  • இவான் டெனிசோவிச்சின் வாழ்வில் ஒருநாள்

    இவான் டெனிசோவிச்சின் வாழ்வில் ஒருநாள்

    250.00
    Add to cart Buy now

    இவான் டெனிசோவிச்சின் வாழ்வில் ஒருநாள்

    இவான் டெனிசோவிச்சின் வாழ்வில் ஒருநாள்
    அலெக்சாண்டர் சோல்செனிட்சின்

    ஒரு பத்துக் கதாபாத்திரங்களும் ரஷ்ய சிறப்பு முகாமின் ஒருநாள் அனுபவங்களும்தான் இவான் டெனிசோவிச்சின் வாழ்வில் ஒரு நாள் நாவலின் கதை. ஸ்டாலின் காலகட்ட அடக்குமுறை அவரது காலகட்டத்திலேயே பதிவானது, ரஷ்ய இலக்கிய வரலாற்றில் வேறந்த நாவலிலும் கிடையாது.

    இரண்டாம் உலகப் போரில் ஜெர்மானியர்களால் சிறைபிடிக்கப்படும் நாயகன், அதிர்ஷ்டவசமாக அதிலிருந்து தப்பிவந்துவிடுகிறான். ரஷ்ய ராணுவமோ அவனை நம்பமறுக்கிறது. உளவாளி என முத்திரை குத்தி சிறையில் அடைத்துவிடுகிறது.

    சிறப்பு முகாமின் ஒரு நாளை விவரிப்பதன் மூலம், அங்கு நடக்கும் ஊழல்கள், சிறைவாழ்வின் பரிதாபங்கள், அடக்குமுறைகள் என அனைத்தையுமே காட்சிப்படுத்திவிடுகிறார் அலெக்ஸாண்டர் ஜோல்செனிட்சின்.

    தமிழில் : க.சுப்பிரமணியன்
    ரூ : 250
    250.00
  • அடையாள மீட்பு

    அடையாள மீட்பு

    180.00
    Add to cart Buy now

    அடையாள மீட்பு

    அடையாள மீட்பு
    காலனிய ஓர்மை அகற்றல்
    ஆப்பிரிக்க இலக்கிய மொழி அரசியல்

    கூகி வா தியாங்கோ

    தேசிய, சனநாயக, மனித குல விடுதலை இதன் மையம். எமது மொழியை மீள் கண்டுபிடிப்பு செய்து மீட்டுருவாக்கம் செய்வதற்கான அறை கூவல், ஆப்பிரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான புரட்சிகர சொல்லாடல்களுடான, புதுப்பிக்கப்பட்ட மீள் தொடர்புக்கான அறைகூவல் ஆகும். மனித இனத்தின் உண்மை மொழியை மீள் கண்டுபிடிப்பு செய்வதற்கான கூக்குரல் அது; போராட்ட மொழியை முன்னெடுப்பதற்கான குரல் அது. அதுதான் நமது வரலாற்றுக்கு அடிப்படையான பொதுமை மொழி. போராட்டமே வரலாற்றைப் படைக்கிறது. போராட்டமே நம்மை உருவாக்குகிறது. போராட்டத்தில் தான் நமது வரலாறு, மொழி, இருப்பு தங்கியுள்ளது. அது நாம் எங்கிருந்தாலும் தொடங்கும்; எது செய்தாலும் இருக்கும். அப்போது நாம் மாட்டின் கார்ட்டர் கண்ட கோடிக்கணக்கான மக்களுடன் சேர்வோம்: நாம் கனவுகாண உறங்குபவர் அல்ல; உலகை மாற்றக் கனவு காண்பவர்கள்.

    தமிழில் : அ. மங்கை

    ரூ : 180
    180.00
  • ஜாதியற்றவளின் குரல்

    ஜாதியற்றவளின் குரல்

    450.00
    Add to cart Buy now

    ஜாதியற்றவளின் குரல்

    ஜாதியற்றவளின் குரல்
    ஜெயராணி

    குடிமை உரிமை / மனித உரிமை அமைப்புகள் எனத் தமிழ்நாட்டில் செயல்படும் எந்த அமைப்புடனும் ஜெயராணி தன்னை இணைத்துக்கொள்ளவில்லை என்றாலும் அவற்றின் கருத்துநிலை, நடைமுறைத் தளங்களைவிட விரிவானதும் வீச்எல்லைகள் கொண்டவையுமான பிரச்சனைகள் புலனாய்வு இதழியாளராக, மனித உரிமை ஆர்வலராக, தலித்திய எழுத்தாளராக, பெண்ணிலைவாதியாகத் தன்னை நிறுவிக் கொள்கிறார் தனது எழுத்துக்கள் மூலம். அம்பேத்கரின் உலகளாவிய மனிதநேயப் பார்வையும் பெரியாரின் சாதி ஒழிப்பு, ஆணாதிக்க எதிர்ப்பு மூடநம்பிக்கை எதிர்ப்புப் பகுத்தறிவுப் பார்வையும் – ஜெயராணி விடயங்களை பார்க்கும் புரிந்துகொள்ளும் கோணத்தை வடிவமைக்கின்றன.
    – எஸ். வி. ராஜதுரை

    ரூ : 450
    450.00
  • திரு & திருமதி ஜின்னா

    திரு & திருமதி ஜின்னா

    750.00
    Add to cart Buy now

    திரு & திருமதி ஜின்னா

    திரு & திருமதி ஜின்னா
    இந்தியாவையே திடுக்கிட வைத்த திருமணம்

    ஷீலா ரெட்டி

    1918ம் ஆண்டில் ருட்டி பெத்தித், முகமது அலி ஜின்னாவை ரகசியத் திருமணம் செய்து கொள்வதற்காகத் தன் தகப்பனாரின் மாளிகையிலிருந்து வெளியேறியதை அறிந்து, மொத்த சமூகமே அதிர்ந்தது; சீற்றமும் அடைந்தது. அவர்கள் இருவருக்குள்ளும் அத்தனை வேற்றுமைகள் – வேறு வேறு சமூகம்; வேறு வேறு மதம்; இருவருக்கும் 24 ஆண்டுகள் வயது வித்தியாசம். இது போன்ற மிக வித்தியாசமான ஓர் உறவுப் பின்னலை, ஷீலா ரெட்டி என்னும் புகழ் பெற்ற இதழியலாளர், இதுவரை வெளிவராத கடிதங்கள், நண்பர்கள் மற்றும் ஏனைய சம காலத்தினர் விட்டுச் சென்ற தகவல்கள், ஆவணங்களோடு பெரும் இரக்கமும் அக்கறையும் கலந்து வெளிக்கொணர்ந்துள்ளார். தில்லி, பம்பாய், கராச்சி போன்ற கதைமாந்தர்களின் வாழ்விடங்களில் ஆழமாகவும், மிக உன்னிப்பாகவும் ஆய்வுகள் மேற்கொண்டு ரெட்டி எழுதிய வாழ்க்கை வரலாறு இது.

    தமிழில் : தருமி

    ரூ: 750
    750.00
  • நீதி பற்றிய கோட்பாடு

    நீதி பற்றிய கோட்பாடு

    750.00
    Add to cart Buy now

    நீதி பற்றிய கோட்பாடு

    நீதி பற்றிய கோட்பாடு
    அமார்த்தயா சேன்

     

    மிக மேன்மையானதொரு புத்தகம் .. நீதி பற்றிய கோட்பாட்டைப் படிப்பது, நடைமுறைக் காரண ஆய்வில் ஒரு முதுநிலை வகுப்பில் பங்கேற்பது போன்றுள்ளது. – ஜியாவுதீன் சர்தார், தி இன்டிபென்டன்ட்

    சேன் நம் சகாப்தத்தின் சிறந்த சிந்தனையாளர்களில் ஒருவர்… பொதுஉலகிற்கான அறிவுவாழ்வினரில் ஒருவர், கலப்பற்ற தூய சிந்தனைகளின் உலகங்களையும், மிக நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தும் கொள்கைகளின் உலகங்களையும் எளிதாகத் தாண்டிச் செல்லும் திறனால் வரையறுக்கப்படுகிறார் என்றால், சேனுக்குப்
    போட்டியாளர்கள் மிக அபூர்வம். – தி டைம்ஸ்

    1971 இல் ஜான் ரால்ஸின் நீதிக் கோட்பாடு நூல் வெளிவந்ததற்குப் பின் அமார்த்தியா சேனின் நீதி பற்றிய கோட்பாடு மட்டுமே இந்தத் துறையில் மிக முக்கியமான பங்களிப்பு என்று நான் நம்புகிறேன் – ஹிலரி புட்மன், ஹார்வர்ட் பல்கலைக்கழகம்

    ‘தாராளவாத அரசியல் தத்துவத்தின் மேலாதிக்கத்தன்மை பற்றிய சேனின் குற்றநீதி அடிப்படையிலான விமரிசனம், அவர் ஆங்கிலம் பேசும் பொதுவுலகின் புகழ்பெற்ற அறிவுவாழ்வினர் என்பதை உறுதிப்படுத்துகிறது’ – நியூ ஸ்டேட்ஸ்மேன் புக்ஸ் ஆஃப் தி டிகேட்

    தமிழில் : க. பூரணச்சந்திரன்

    ரூ: 750
    750.00
  • அரசியல் சிந்தனையாளர் புத்தர்

    அரசியல் சிந்தனையாளர் புத்தர்

    350.00
    Add to cart Buy now

    அரசியல் சிந்தனையாளர் புத்தர்

    அரசியல் சிந்தனையாளர் புத்தர்
    காஞ்ச அய்லய்யா

    ‘பௌத்தம் ஒரு மதமல்ல, ஓர் அரசியல் சிந்தனை. புத்தர் ஓர் அரசியல் சிந்தனையாளர்; உலகின் பல சிந்தனையாளர்களுக்கும் தத்துவவாதிகளுக்கும் முன்னோடியாக விளங்குகிறார்’
    – காஞ்ச அய்லய்யா

    இன்றைய நவீன உலகம் அறிந்திருக்கும் பாராளுமன்ற நடைமுறை விதிகளைப் பௌத்தச் சங்கங்கள் அன்றே அறிந்திருந்தன; அவற்றைப் பின்பற்றவும் செய்தன. இருக்கைகள் எப்படி அமைக்கப்பட வேண்டும்
    என்பதற்கும் விதிகள் இருந்தன; தீர்மானங்கள் கொண்டுவருவது குறித்தும், தீர்மானங்கள் குறித்தும், குறைவெண் வரம்பு, கொறடா, வாக்குகள் எண்ணுதல், வாக்குச் சீட்டுகள் மூலம் வாக்களித்தல், ஒருவர்மீது கண்டன தீர்மானம் கொண்டுவருதல், ஒழுங்குமுறைப்படுத்துதல், தீர்ப்பு வழங்குதல் போன்ற
    அனைத்திற்கும் விதிகள் இருந்தன. …எனினும், ஒருவரது பொருளாதார, சமுதாய, அரசியல் சுதந்திரத்தின் நடைமுறைச் செயல்பாட்டில்தான் பௌத்தத்தின் சாரம் இருக்கிறது. ஜனநாயகத்தின் வழிகாட்டியாகப் புத்தர் இருந்தார். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் குறித்து தீவிரமாக அவர் பேசினார்’

    – அம்பேத்கர், அரசியல் நிர்ணய சபை உரையில்.

    தமிழில் : அக்களூர் இரவி

    Kancha Elayya / Kancha Ilaiah

    பக்கங்கள் 336  விலை ரூ 350

    350.00
  • இந்தியத் தேர்தல்களை வெல்வது எப்படி?

    இந்தியத் தேர்தல்களை வெல்வது எப்படி?

    320.00
    Add to cart Buy now

    இந்தியத் தேர்தல்களை வெல்வது எப்படி?

    இந்தியத் தேர்தல்களை வெல்வது எப்படி?
    நீங்கள் தெரிந்துகொள்ளக் கூடாது என்று அரசியல் கட்சிகள் விரும்புவது

    சிவம் சங்கர் சிங்
    (பாஜகவின் முன்னாள் தேர்தல் ஆலோசகர்)

    தமிழில் :  இ.பா. சிந்தன்

    பாஜகவின் அரசியல் பிரச்சார ஆலோசகராக இருந்த ஒருவரால் எழுதப்பட்ட இந்நூல், மறைக்கப்பட்டிருக்கும் தேர்தல் உலகிற்குள் வாசகர்களை அழைத்துச் சென்று, அங்கு தேர்தலுக்கான திட்டமிடல் எவ்வாறெல்லாம் நடத்தப்படுகிறது என்பதையும், அவற்றில் மக்களை எது ஈர்க்கும் எது ஈர்க்காது என்பதையும் மிகத்தெளிவாகப் பேசுகிறது.
    ஆய்வுகளையும், நேர்காணல்களையும், நூலாசிரியரின் சுய அனுபவங்களையும் அடிப்படையாகக் கொண்டு இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது. அரசியலும் அரசியல் கட்சிகளும் செயல்படும் விதத்தையும், வெற்றிகரமான தேர்தல் பிரச்சாரங்கள் நடத்துவதையும் விரிவாக இந்நூல் விவரிக்கிறது.
    தேர்தல் பிரச்சாரங்களில் அரசியல் ஆலோசகர்களின் பங்கு என்ன?
    நவீன தொழிற்நுட்பக் கருவிகளான தரவு பகுப்பாய்வு (data analytics), மதிப்பாய்வு மற்றும் சமூக ஊடகங்களையெல்லாம் பயன்படுத்தி அரசியல் கட்சிகள் எவ்வாறு பிரச்சாரம் செய்கிறார்கள்?
    தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பதில் பணத்தின் பங்கு என்ன?
    மக்களைப் பிளவுபடுத்தும் பிரச்சாரத்திற்கும் ஃபேக் செய்திகளைப் பரப்புவதற்கும் எவையெல்லாம் உதவி செய்கின்றன?
    இந்திய அரசியலின் எதிர்காலம் தான் என்ன?

    பக்கங்கள்: 360   ரூ320
    320.00
  • இக்கிகய்

    இக்கிகய்

    350.00
    Add to cart Buy now

    இக்கிகய்

    இக்கிகய்

    ஒரு நீண்ட, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான ஜப்பானிய
    இரகசியத்தைத் திரைவிலக்கும் ஓர் அருமையான நூல்!

    எல்லோருக்கும் ஓர் இக்கிகய் இருக்கிறது, அதாவது, தினமும் காலையில் படுக்கையைவிட்டு உற்சாகமாகத் துள்ளியெழுவதற்கான ஒரு காரணம் இருக்கிறது, என்றுஜப்பானியர்கள் நம்புகின்றனர்.
    உத்வேகம் மற்றும் ஊக்கத்தின் ஊற்றாகத் திகழ்கின்ற இந்நூல், உங்களுடைய தனிப்பட்ட இக்கிகய்யைத் திரைவிலக்குவதற்கான கருவிகளை உங்களுக்குவழங்கும். உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய வல்லமை வாய்ந்தவை அவை. அவசரப் போக்கைக்கை விட்டுவிட்டு, உங்கள் வாழ்வின் நோக்கத்தைக்கண்டறிந்து, உங்களுடைய நட்புகளை வளர்த்தெடுத்து, உங்கள் ஆழ்விருப்பங்களுக்கு உங்களை முழுவதுமாக அர்ப்பணித்துக்கொள்வ
    து எப்படி என்பதை இந்நூல் உங்களுக்கு விளக்கிக்காட்டும்.
    இக்கிகய்யின் துணையுடன் ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்க்கைக்கு அர்த்தத்தையும்  ஆனந்தத்தையும் கொண்டுவாருங்கள்.

     

    எழுத்தாளர்கள் பற்றி

    ஹெக்டர்கார்சியா

    ஸ்பெயினில் பிறந்த ஹெக்டர் கார்சியா இப்போது ஜப்பானில் குடியேறியுள்ளார். அவர் ஜப்பானில் பத்தாண்டுகளுக்கும் மேலாக வசித்துவருகிறார். ஜப்பானியக் கலாச்சாரம் தொடர்பான பலநூல்களை அவர் எழுதியுள்ளார். அவற்றில்‘யகீக்இன்ஜப்பான்’, ‘இக்கிகய்’ஆகிய இரண்டு நூல்களும் சர்வதேச அளவில் விற்பனையில் சாதனைகள்புரிந்துள்ளன. ஜப்பானுக்குக் குடிபெயர்வதற்கு முன்பு, சுவிட்சர்லாந்திலுள்ள ‘செர்ன்’ நிறுவனத்தில் ஒருகணினிப் பொறியாளராக அவர் பணியாற்றினார்.

    பிரான்செஸ்க் மிராஷெஸ்

    பிரான்செஸ்க் மிராஷெஸ், பலவிருதுகளைப் பெற்றுள்ள, சர்வதேச அளவில் விற்பனையில் சாதனைகள் புரிந்துள்ள பல நூல்களை எழுதியுள்ளார். எப்படிச் சிறப்பாக வாழ்வது என்பது குறித்தநூல்களும் அவற்றில் அடக்கம். அதோடு, ‘லவ் இன் ஸ்மால்லெட்டர்ஸ்’, ‘வாபி & சாபி’ ஆகிய இரண்டு நெடுங்கதைகளும் அவற்றில் அடங்கும்.

     

    Ikkigai / Ikkigayi / Ekkigai / Ekigai

    பக்கங்கள்: 212   ரூ350

    350.00
  • பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை

    பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை

    399.00
    Add to cart Buy now

    பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை

    பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை
    ராபர்ட் கியோஸாகி

    விற்பனையில் மகத்தான சாதனைகளைப் படைத்துள்ள புத்தகம்

    ராபர்ட் கியோஸாகியின் ‘பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை’ எல்லா காலத்திலும் தனிப்பட்ட # 1 நிதி புத்தகமாக மாறியுள்ளது … டஜன் கணக்கான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உலகம் முழுவதும் விற்கப்படுகிறது.

     

    ‘பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை’ என்பது ராபர்ட்டின் இரண்டு அப்பாக்களுடன் – அவரது உண்மையான தந்தை மற்றும் அவரது சிறந்த நண்பரின் தந்தை, அவரது பணக்கார அப்பா – இருவருமே பணம் மற்றும் முதலீடு பற்றிய அவரது எண்ணங்களை வடிவமைத்த வழிகள். புத்தகம் நீங்கள் பணக்காரர்களாக இருக்க அதிக வருமானம் சம்பாதிக்க வேண்டும் என்ற கட்டுக்கதையை வெடிக்கச் செய்கிறது மற்றும் பணத்திற்காக வேலை செய்வதற்கும் உங்களுடைய பணம் உங்களுக்காக வேலை செய்வதற்கும் உள்ள வித்தியாசத்தை விளக்குகிறது.

     

    • பணக்காரர் ஆக அதிக வருமானம் ஈட்ட வேண்டும் என்ற கட்டுக்கதையை வெடிக்கச் செய்கிறது.
    • உங்கள் வீடு ஒரு சொத்து என்ற நம்பிக்கையை சவால் செய்கிறது.
    • பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பணத்தைப் பற்றி கற்பிக்க பள்ளி முறையை ஏன் நம்ப முடியாது என்பதைக் காட்டுகிறது.
    • ஒரு சொத்து மற்றும் பொறுப்புக்கு ஒரு முறை மற்றும் அனைத்தையும் வரையறுக்கிறது.
    • உங்கள் குழந்தைகளுக்கு அவர்களின் எதிர்கால நிதி வெற்றிக்காக பணத்தைப் பற்றி என்ன கற்பிக்க வேண்டும் என்பதைக் கற்பிக்கிறது.

    Panakkara Thanthai Ezhai Thanthai

    பக்கங்கள்: 248   ரூ399

    399.00
  • மௌன வசந்தம்

    மௌன வசந்தம்

    240.00
    Add to cart Buy now

    மௌன வசந்தம்

    மௌன வசந்தம்
    ரெய்ச்சல் கார்சன்

     

    உலகை மாற்றிய ஐந்து புத்தகங்களில் ஒன்று.

    சுற்றுச்சூழல் குறித்த முதன்மையான நூல்.
    சைலண்ட் ஸ்பிரிங்கி’ன் (மௌன வசந்தம்) மிக முக்கியமான பாரம்பரியம், மனித தலையீட்டால் இயற்கை பாதிக்கப்படக்கூடியது என்ற புதிய பொது விழிப்புணர்வு. கார்சன் ஒரு தீவிர முன்மொழிவை முன்வைத்தார்: சில சமயங்களில், தொழில்நுட்ப முன்னேற்றம் மிகவும் இயற்கையான செயல்முறைகளுடன் முரண்படுகிறது. வனப்பகுதி காணாமல் போவதைப் பற்றி சிலர் கவலைப்படுவதால், பாதுகாப்பு என்பது பரந்த பொது நலனை உயர்த்தவில்லை. ஆனால் கார்சன் கோடிட்டுக் காட்டிய அச்சுறுத்தல்கள் – உணவுச் சங்கிலியின் மாசுபாடு, புற்றுநோய், மரபணு சேதம், முழு உயிரினங்களின் இறப்பு – புறக்கணிக்க முடியாத அளவுக்கு பயமாக இருந்தது. முதன்முறையாக, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக தொழிற்துறையை ஒழுங்குபடுத்துவதற்கான தேவை பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது, மேலும் சுற்றுச்சூழல் பிறந்தது.

    தமிழில் :  பேரா  ச வின்சென்ட்

    Mauna Vasantham / Mavuna Vasantham 

    பக்கங்கள் 240  விலை ரூ 240

    240.00
  • ஒற்றை வைக்கோல் புரட்சி   

    ஒற்றை வைக்கோல் புரட்சி   

    160.00
    Add to cart Buy now

    ஒற்றை வைக்கோல் புரட்சி   

    ஒற்றை வைக்கோல் புரட்சி   
    மசானபு ஃபுகோகா

     

    புதிதாய் வருபவர்கள் ‘இயற்கை வேளாண்மை’ என்பதற்கு, இயற்கையானது வேளாண்மையைக் கவனித்துக்கொள்ளும், நாம் சற்றுத் தள்ளி உட்கார்ந்து வேடிக்கை பார்க்கலாம் என்று பொருள்கொண்டால், ஃபுகோகா அவர்கள் அறிந்துகொள்ள வேண்டியதும் பெருமளவில் உள்ளது என்பதைக் கற்றுக் கொடுப்பார். சரியாகக் கூற வேண்டுமானால், வேட்டையாடிச் சேகரித்த காலம் ஒன்றுதான் இயற்கை வேளாண்மைக் காலம்.
    பயிர்களை வளர்க்கத் துவங்கியது கலாச்சாரக் கண்டுபிடிப்பாகும். அதனால் அதற்கு அறிவும் தொடர்ச்சியான முயற்சியும் தேவைப்படுகிறது. ஃபுகோகாவின் முறையில் உள்ள முக்கியமான வேறுபாடு என்னவென்றால், அது இயற்கையோடு ஒத்துழைப்பதில் இருக்கிறது. இயற்கையை  ஆக்கிரமித்து அதை மேம்படுத்துவதில் அல்ல.

    தமிழில் : பூவுலகின் நணபர்கள்

    Otrai Vaikol Puratchi / Ottrai Vaikkol Puratchi
    ரூ160

    160.00